முன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கொச்சி: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் பிராங்கோ முலக்கல் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.

அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது பெயிலில் வந்துள்ளார். இவர் வாடிக்கன் சர்ச் மூலம் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அல்பி, அனுபமா, ஜோசபின், அன்சிட்டா ஆகிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இருவரும் பீகாருக்கும், ஒருவர் பஞ்சாப்பிற்கும், ஒருவர் கண்ணூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற வருடம் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
இவர்கள் கேரளா தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம் முன்பும் கூட போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பின்பே பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதமே, பணியிட மாற்றம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்போது அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் குருவிலங்காடு கான்வெண்டில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications