Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவாலய கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ்’ குண்டு.. சிதறிக் கிடந்த IED பாகங்கள்.. டிஜிபி தகவல்!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரள மாநிலம் களமச்சேரியில் தேவாலய கூட்டத்தில், அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்த நிலையில், வெடித்தவை டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த IED குண்டுகள் என்று கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.20 மணி அளவில் இந்த கூட்ட அரங்கில் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். 10 நொடிகளுக்குள் அடுத்தடுத்து 2 முறை வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Kerala Police found an IED placed in a tiffin box has been recovered from blast site

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பலரை மீட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேரள மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட காவ்துறை அதிகாரிகளுக்கு கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த கேரளா டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வெடிபொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் வெடிபொருள் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். களமச்சேரி வெடிபொருள் வெடிப்பு தொடர்பான நிலவரத்தையும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அமித்ஷா கேட்டறிந்தார்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு டிஜிபி, ஏடிஜிபி கேரளா அமைச்சர்கள் பலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். களமச்சேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கேரளாவில் அமைந்துள்ள தேவாலயத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு என்றும், இது வெடிகுண்டு தாக்குதல் என்றும் கண்டறிந்திருப்பதாக கேரள காவல்துறை டிஜிபி ஷேக் தர்வேஸ் தெரிவித்துள்ளார். 2 மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு டிஜிபி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போலீசார், வெடிகுண்டு வெடித்த அரங்கில் இருந்து IED குண்டின் சில பாகங்களை மீட்டுள்ளனர்.

"கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு. டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த IED வகை குண்டுகள் 3 முறை அடுத்தடுத்து வெடித்துள்ளன. குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது." என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 3 முறை டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+