#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங்
கோவை: மேட்டுப்பாளையம் அருகே நடூர் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சுவர் தீண்டாமைச்சுவர் என்றும் அந்த சுவர் விழுந்து தலித் மக்கள் 17 பேர் இறந்து போனதாகவும் டுவிட்டரில் பலர் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் கனமழையால் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மேல் விழுந்ததில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆரம்பத்தில் கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததாக மட்டுமே தகவல்கள் பரவின.
ஆனால் கண்ணப்பன் லேஅவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவர் தனது காலியிடத்தை சுற்றி 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் சுற்றுச்சுவர் எழுப்பி இருந்தார். இது உண்மையில் தீண்டாமைச் சுவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களிலும் கருத்துப் பதிவுகளாக வெளிப்பட்டு வருகிறது.
|
என்ன சொல்வது
இதைச் சொல்ல வார்த்தையே இல்லை
|
மனிதம் செத்து விட்டது
மனிதம் இன்று செத்துப் போய் விட்டது. ஜாதிகளே வாழ்கின்றன.
|
அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்
இதற்குக் காரணமான அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்று இவர் குமுறியுள்ளார்.
|
மோசமான சம்பவம்
இது மிகவும் மோசமான துயரமான சம்பவம்.












Click it and Unblock the Notifications