கோவை மாணவியின் “தற்கொலை கடிதம்” நினைவிருக்கா? 9 மாத விசாரணையில் திடீர் திருப்பம்! 2 முதியவர்கள் கைது
கோவை: கடந்த ஆண்டு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கோவை சின்மயா பள்ளி மாணவி வழக்கில் 2 முதியவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
Recommended Video
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அமைந்து உள்ள சின்மயா தனியார் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லையே இதற்குக் காரணம் என்றும், இதனால் கடந்த 6 மாதமாக மன உளைச்சலில் மாணவி தவித்து வந்ததாகவும் சக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அதேபோல மாணவி புகார் அளித்த பின்னரும், அலட்சியமாக இருந்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

விரிவான விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கோவை முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்கொலை கடிதம்
தற்கொலை செய்துக்கொண்ட மாணவி, உயிரிழக்கும் முன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு "யாரையும் சும்மா விடக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தில் இடம்பெற்ற 2 பேர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

2 முதியவர்கள் கைது
இந்த நிலையில் 9 மாத தீவிர விசாரணைக்கு பிறகு 2 முதியவர்களை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர்கள் சிறுமி வசிக்கும் பகுதியை சேர்ந்த முஹம்மது சுல்தான் (70) மற்றும் மனோராஜ் (58) ஆவார்கள். இருவர் மீதும் போக்சா வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications