உடல் மெலிந்து.. அழுகி பலியானது.. கோவையில் அடுத்தடுத்து 4 யானைகள் மரணம்.. அதிர வைக்கும் மர்மம்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 11 நாட்களில் நான்கு யானைகள் பலியானதும், அதில் 3 யானைகள் வெறும் இரண்டு நாட்களில் பலியானாதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு காட்டுப்பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது .
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கோவையில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

எங்கே நடந்துள்ளது
மேட்டுப்பாளையம்:சிறுமுகை காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து யானைகள் வருவது வழக்கம். சத்தியமங்கலம் காடு தொடங்கி பவானிசாகர் காட்டுப்பகுதி வரை பல்வேறு காட்டுப்பகுதியில் இருந்து இங்கே யானைகள் வருவது உண்டு. 50க்கும் அதிகமான யானைகள் இங்கே எப்போதும் காணப்படும்.

அதிக பாதுகாப்பு
யானைகளுக்கு அதிக பாதுகாப்பான காட்டுப்பகுதியாக இந்த வனப்பகுதி திகழ்ந்து வந்தது. இந்த நிலையில்தான் இந்த காட்டுப்பகுதியில் அடுத்தடுத்து 11 நாட்களில் நான்கு யானைகள் பலியானதும், அதில் 3 யானைகள் வெறும் இரண்டு நாட்களில் பலியானாதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் மூன்று பெண் யானைகள் இறந்துள்ளது. அதேபோல் நான்கு ஆண் யானைகள் இறந்துள்ளது.

வயது
இதில் இரண்டு யானையின் வயது 24 மற்றும் 25. இன்னொரு யானையின் வயது 17. வேறு ஒரு யானையின் வயது 48 ஆகும். இந்த யானைகள் எப்படி பலியானது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த யானையின் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அனைத்து யானைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இறந்து உள்ளது. இந்த யானைகள் உடல் மெலிந்து இறந்துள்ளது.
Recommended Video

என்ன காரணம்
அதேபோல் இந்த யானைகளுக்கு இடையில் சிகிச்சை அளித்தும் கூட அது பலன் அளிக்கவில்லை. இந்த யானையில் மொத்தம் 3 யானைகளின் உடல் அழுகி போய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா யானைகளும் உயிருக்கு போராடி பலியாகி உள்ளது. இப்படி யானைகள் கோவையில் தொடர்ந்து பலியாகும் சம்பவம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications