70 வயது கோவை பெண்மணியை காணவில்லை! நீங்க பார்த்தீங்களா?
கோவை: கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணியை கடந்த 8 நாட்களாக காணவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை. வயது 70. இவருடைய கணவர் கணேசன் 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவருக்கு ரமேஷ் (38) என்ற மகனும், ரம்யா (34) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

தெய்வானை சின்னத்தடாகம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிலும், கோவில்மேட்டில் உள்ள மகள் வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 6 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சின்னத்தடாகத்தில் உள்ள மகன் வீட்டில் இருந்து வெளியே சென்றவரை கடந்த 8 நாட்களாக காணவில்லை. காணாமல் போன அன்று பிங்க் நிற புடவை அணிந்திருந்தார். உயரம் 5 அடி. மாநிறம்.
இதுதொடர்பாக சின்னத்தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இவரைப் பற்றிய விவரம் அறிந்தால் 98948-13373, 96555-99969 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.












Click it and Unblock the Notifications