Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023-ஆம் வருடம், ஆதியோகி தரிசனத்திற்கு 80 லட்சம் பேர் வந்தனர்: ஈஷா தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர் என்றும், ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் 1,26,000 பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர் என்று ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை அருகே ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனையடுத்து ஆதியோகியை காண தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதியில் இருந்து பக்தர்கள் தரிஷனத்திற்காக வருகின்றனர். இது போக யோகாவும் இங்கு சொல்லி தரப்படுகிறது.

80 lakh people visits Adiyogi Darshan in 2023: Isha information

இதேபோல் மஹா சிவராத்திரி அன்று பிரமாண்டமாக ஆதியோகியை தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர். இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் ஆதியோகியை 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர் என்றும், இதில் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் 1,26,000 பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர் என்று ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஈஷாவிற்கு வரும் மக்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

மேலும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழுவாக வரும் அந்த பக்தர்கள் சமைத்து உண்பதற்காக, வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே தனி இடவசதியும், கூடுதலாக இலவச கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோவையின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.

மேலும், ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம், கோவையில் ஆன்மீக சுற்றுலாவுடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+