மனுஷங்களா நீங்க.. கோவை யானையின் வயிற்றில் தோண்ட, தோண்ட பிளாஸ்டிக்! குட்டியுடன் உயிரிழந்த சோகம்..!
கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்த யானையின் வயிற்றில் 15 மாத ஆண் யானைக் குட்டி முழு வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் வருவது வாடிக்கையாக உள்ளது. சமீபகாலமாக இவ்வாறு ஊருக்குள் வரும் யானைகள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை உண்பதும் வழக்கமாகி விட்டது.

கோவை மருதமலை அடிவாரத்தில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தது. இதையடுத்து, வனத் துறையினர் மே 17 ஆம் தேதி முதல் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது உடனிருந்த குட்டி யானை அவ்வப்போது தாய் யானையை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
மருத்துவக் குழுவினர், வனத் துறையினர் கடந்த நான்கு நாட்களாக அங்கேயே முகாமிட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட யானைக்கு நேற்று ஹைட்ரோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
ஐந்து கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட யானைக்கு காது நரம்பு மூலம் மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் அளிக்கப்பட்டது. ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கும் வகையில், வனப் பகுதியில் தற்காலிக குட்டை அமைக்கப்பட்டு அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. பின்னர், பொக்லைன் மூலமாக யானையை தண்ணீருக்குள் இறக்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ் யானைக்கு ஏற்றப்பட்டு மருத்துக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். யானையின் உடலிலும் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வனத் துறையினர் கூறுகையில், காட்டு யானைக்கு நரம்பு வலி சிகிச்சை மூலமாகவும் ஊசி மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி பசுந்தீவனம் பழங்கள் கலி மற்றும் தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன. யானை சிறிதளவு பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டது.
ஹைட்ரோதரபி கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் யானை மாலை 3:45 மணி அளவில் இறந்துவிட்டது. யானை இறந்ததற்கான காரணம் ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம், ஆனாலும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று கோவை மாவட்ட வனத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண் யானைக்கு இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், யானையின் வயிற்றில் 15 மாதங்கள் நிரம்பிய நன்கு வளர்ச்சியடைந்த ஆண் யானை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் யானையின் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வனம் மற்றும் விலங்குகள் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications