எங்க வீட்டு பக்கம் வருவியா.. சாவு வீட்டுக்கு போய்வந்தவரை சாகடித்த கோவை தம்பதி.. அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே இறப்புக்கு சென்று திருப்பியவரை பக்கத்து வீட்டு தம்பதி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர், தனது உறவினர் ஒருவரின் இறப்புக்கு சென்று வீடு திரும்பி இருக்கிறார்.

A couple killed a neighbor man with a stick near Coimbatore

இவர்களது பக்கத்து வீட்டில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரை தம்பதி வசித்து வருகிறார். ரங்கசாமியை இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு தங்கள் வீட்டு வழியாக செல்லக் கூடாது என வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ரங்கசாமிக்கும், கோவிந்தராஜ் மற்றும் தாமரை தம்பதிக்கும் ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டையை எடுத்து கோவிந்தராஜ் மற்றும் தாமரை தம்பதி, ரங்கசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே சுரண்டு மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, ரங்கசாமி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரையை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறப்புக்கு சென்று திருப்பியவரை பக்கத்து வீட்டு தம்பதி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் கோவை அரசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+