கோவை அரசு பஸ்சில் வந்த போது பிரசவ வலி.. கர்ப்பிணிக்கு உதவிய முகம் தெரியாத பெண் 'டாக்சி' டிரைவர்
கோவை: கோவையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 28 வயது பெண், கோவை ரயில் நிலையம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு அந்த நேரத்தில் வந்த பெண் டாக்ஸி டிரைவர், கொஞ்சமும் தாமதிக்காமல் தனது காரில் ஏற்றிச் சென்று பிரசவ வார்டுக்கு அழைத்து சென்று உதவினார்.
கோவையை சேர்ந்த 28 வயதாகும் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கோவை ரயில் நிலையம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே கண்டக்டர் பஸ்சை அரசு மருத்துவமனைக்கு ஓட்டி செல்லுமாறு டிரைவரிடம் கூறினார்.

மருத்துவமனை முன்பு பஸ் நின்றதும் அந்த கர்ப்பிணியை மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல சிலர் உதவி கேட்டனர். உடனே அங்கு நின்றுகொண்டு இருந்த பெண் டாக்சி டிரைவர் ரமாதேவி என்பவர் தானாக முன் வந்து அந்த கர்ப்பிணியை தனது காரில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குள் சென்று பிரசவ வார்டில் சேர்த்தார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து டாக்ஸி டிரைவரை ரமாதேவி கூறும் போது, என்னுடைய சொந்த ஊர் தேனி. நான் அங்கு இருந்து கோவைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு, அரசு மருத்துவமனை முன்பு நின்று கொண்டு இருந்தேன். அப்போது அரசு பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணியை பார்த்ததும் எனது காரில் ஏற்றி பிரசவ வார்டு வரை அழைத்து சென்று உதவினேன்" இவ்வாறு கூறினார்.
கோவை போலீசாரின் அதிரடியால் அடுத்தடுத்து கைதான போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள்: கோவை உக்கடம் போலீசார் பேரூர் பைபாஸ் ரோடு மீன் மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்ற போது, கஞ்சா விற்ற கெம்பட்டி காலனியை சேர்ந்த சிவகுரு (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ராமநாதபுரம் சிவராம் நகர் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (33), பீளமேட்டை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 140 போதை மாத்திரை, 2 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், வேலாண்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த சரவணகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது போல் கோவில்பாளையம் போலீசார் கீரணத்தம் புதுப்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வீரா என்ற வீரக்குமார் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications