பரோட்டா சாப்பிட்டு தூங்கிய மருத்துவ மாணவி.. காலையில் நடந்த கொடூரம்.. கோவையில் சோக சம்பவம்
கோவை: கோவையில் மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்குச் சென்றவர் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய நிலையில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாட்டம், துடியலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பேர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (62). கட்டுமான ஒப்பந்தப் பணியைச் செய்து வரும் தியாகராஜனின் மகள் கீர்த்தனா (வயது 21). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். வீட்டிற்கும், கல்லூரிக்கும் சென்று வர வெகுதூரம் என்பதால் கல்லூரியில் உள்ள விடுதியில் கீர்த்தனா தங்கி படித்து வந்தார்.

வார விடுமுறையன்று கீர்த்தனா தனது வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். இரு தினங்கள் வீட்டில் இருந்துவிட்டு திங்கள்கிழமை கல்லூரிக்குச் செல்வார். அந்த வகையில், இந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு கிளம்பி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளார். தனது பெற்றோருடன் விடுமுறை நாள்களை சந்தோஷமாக கீர்த்தனா கழித்துள்ளார்.
இந்நிலையில், கீர்த்தனா சனிக்கிழமை இரவில் பரோட்டா சாப்பிட வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் கீர்த்தனாவுக்கு பரோட்டசா வாங்கி கொடுத்துள்ளனர். கீர்த்தனாவும் அதனை சாப்பிட்டுள்ளார். பின்னர், இரவில் தூங்குவதற்காக தனது அறைக்குச் சென்றுள்ளார். மிகவும் சாதாரணமாகவே கீர்த்தனா இருந்துள்ளார்.
கீர்த்தான வழக்கமாக எப்போதும் காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காமலேயே இருந்துள்ளார். அறையை விட்டு வராததால் அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குச் சென்று எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், அப்போது கீர்த்தனாாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் வராமல் இருந்துள்ளது. தொட்டு எழுப்பி பார்த்தபோது அவர் எந்தவொரு அசைவும் இல்லாமல் படுத்து கிடந்துள்ளார்.
இதனால், பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனடியாக கீர்த்தனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள் கீர்த்தனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது. ஆசையாக வளர்த்து வந்த மகள் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனா உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இரவில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications