ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்
கோவை: கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அவிநாசி சாலையில் தமிழ்நாட்டின் நீளமான ஜி.டி நாயுடு மேம்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மேம்பாலத்தில் ஏ.ஐ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கோவையின் உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கோவை மாநகரின் மக்கள் தொகை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி மற்ற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

ஜிடி நாயுடு மேம்பாலம்
இதன் காரணமாக மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த வகையில் கோவை மாநகரில் ஏற்கனவே உக்கடம் மேம்பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், கணபதி டெக்ஸ்டூல் பாலம். வடகோவை மேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன. சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் இது தான். இந்த மேம்பாலத்திற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டியது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அவிநாசி சாலை கோவையின் இதய பகுதியில் உள்ளது. மாவட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அங்கு உள்ளன.
ஏஐ கேமராக்கள்
இந்த மேம்பாலம் மக்களுக்கு நன்கு பயனளித்தாலும், 10.10 கிமீ தொலைவில் இருப்பதால் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்துதல், வாகனங்களில் சாகசம் செய்தல் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதை சரி செய்வதற்காக ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஏஐ கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தனர்.
இதற்கான பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை தற்போது தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 10 கிமீ தொலைவில் 45 ஏஐ கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுதல், விபத்து, அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிப்பதற்கு ஏஐ கேமராக்கள் பயன்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நேரடியாக அபராதம்
கேமராக்களுடன் மேம்பாலத்தில் 18 எல்இடி திரைகளும் வைக்கப்படவுள்ளன. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து அந்த திரையில் ஒளிபரப்பப்படும். இந்த கேமராக்கள் காவல்துறை மற்றும் ஆர்டிஓ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹெல்மட், சீட் பெல்ட் அணியாதது, அதிவேகமாக செல்லுதல், ட்ரிபுள்ஸ், அதிக சுமைகளை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து நேரடியாக செலான் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஜிடி மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் விபத்துகள் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல் -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ்












Click it and Unblock the Notifications