Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சால் ஆடிப்போன திமுக

Subscribe to Oneindia Tamil

கோவை: தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் படிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கோவை- அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு ஆகஸ்ட் 20ம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. மெகா தொழில் நிறுவனத் தொடர்பு நிகழ்வாக இந்த மாநாடு நடைபெற்றது. மேலும் இந்த மாநாடு தமிழ்நாடு தி குளோபல் ஸ்கில் கேப்பிட்டல் என்ற கருப்பொருளில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

coimbatore ptr Palanivel Thiagarajan

மேலும் இந்த மாநாடு தமிழ்நாட்டை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான பாடத்திட்டத்தைப் பட்டியலிடும் நோக்கத்துடன் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பாக நடந்தது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியல் ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு, மிகவும் சிறப்புமிக்க மாநாடு.. இந்த மாநாட்டின் கருப்பொருள் முதலமைச்சரின் அறிக்கையை எதிரொலிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும்.

தேசிய தரவரிசையில் பல்வேறு கல்லூரிகள் இருப்பினும், இங்குள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு போதுமானதாக உருவாக்கப்படவில்லை என்பதால் , தமிழ்நாட்டிலும், உலகச் சந்தைகளிலும் முழுத் திறனையும் தமிழகத்தால் அடைய முடியவில்லை" என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இந்த கருத்து முற்றிலும் உண்மை என்று கூறியுள்ள நெட்டிசன்கள், வளர்ந்த நாடுகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட தங்கள் புத்தகங்களுக்கு வெளியே படிக்கிறார்கள். ஆனால் இங்கே, முதுநிலைப்பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் புத்தகங்களை ஒட்டிக்கொண்டு தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி படிப்பது அவர்களுக்கு ஒரு தொழில்முறை கல்வியை வழங்காது. கல்வி முறையில் சீரமைப்பு தேவை என்று கூறியுள்ளனர்.

இதனிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்தை வரவேற்றுள்ள சில பாஜகவினர், உண்மையை ஒப்புக்கொண்டிருப்பதாக பிடிஆரை பாராட்டி உள்ளனர். அதேநேரம் இப்போதுதான் தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளதாக மத்திய அரசே பாராட்டி உள்ள நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பேச்சு திமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+