விடலையே.. "இதோ" பாருங்க.. கோலி குண்டு, ஆணிகளை எடுத்து காண்பித்த அண்ணாமலை.. சுளீர் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: இன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது பாக்கெட்டில் இருந்து கோலிகுண்டுகளையும், ஆணிகளையும் எடுத்து காண்பித்து புகார் வைத்தார்.

கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வந்தார். கோவில் உள்ளே சென்று வழிபாடு செய்து, பின்னர் கந்தசஷ்டி கவசம் பாடினார்.

உள்ளே பூசாரிகளிடம் நீண்ட நேரம் அண்ணாமலை ஆலோசனை செய்தார். போலீசார் நடத்திய விசாரணை பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

இந்த நிலையில் வழிபாட்டிற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, ஆளும் திமுக அரசிற்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. மாநில அரசுக்கு நான் கேள்வி கேட்க காரணம் இருக்கிறது. நான் மட்டும் கேள்வி கேட்கவில்லை. செய்தியாளர்களும் கேள்வி கேட்கிறார்கள். அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை ஓரமாக உட்கார வைக்க வேண்டும் என்று எண்ணம் கிடையாது. அவர்கள் நன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

 ஆட்சி செய்ய வேண்டும்

ஆட்சி செய்ய வேண்டும்

திமுக இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுடைய மதிப்பை பெற்று மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று உள்ளார். பதவி ஏற்ற போதே நாங்கள் சொன்னோம். அவர் ஆட்சி செய்ய போதிய ஆலோசனைகளை வழங்குவோம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் என்று கூறினோம். அப்படித்தான் செய்து வருகிறோம்.

உயிர்சேதம்

உயிர்சேதம்

மக்களுக்கு எந்த விதமான உயிர்சேதமும் ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் நாங்கள் பேசி வருகிறோம். கோவில் பக்கத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் இவை, என்று கூறி பாஜக தலைவர் அண்ணாமலை பாக்கெட்டில் இருந்து கோலி குண்டு மற்றும் ஆணிகளை எடுத்து காட்டினார். தொடர்ந்து பேசிய அவர்.. என் கையில் இருப்பவை கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள். கோவில் பக்கத்தில் இருந்து மக்கள் கொடுத்தது இது.

ஆணிகள்

ஆணிகள்

இவை ஆணிகள் மற்றும் கோலிகுண்டுகள். இதை செய்தவர்கள் சாதாரணமாக செய்யவில்லை. வேண்டுமென்றே உயிர்சேதம் ஏற்படுத்த வேண்டும் என்று செய்து இருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜக வைக்கும் கோரிக்கை, கேள்வி ஒன்றுதான். சில தவறுகள் நடந்து உள்ளது. அதை திருத்த வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

கோலிகுண்டுகள்

கோலிகுண்டுகள்

கடவுள் உதவியால் நமக்கு எதுவும் நடக்கவில்லை. நிலைமை மோசமாகும் முன் உளவு அமைப்புகளை சரி செய்ய வேண்டும். நிலைமை மோசமான பின் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைக்க கூடாது. உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்னும் இதை சிலிண்டர் விபத்து என்று சொல்வதை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும், என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+