IIM-ல படிச்சாரா? அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியல.. எந்த பேப்பர்னு பாருங்க! அதிமுக பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: "IIM-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. நீதிமன்ற பயன்பாட்டிற்கான, 'India Court Fee' பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் அண்ணாமலை" என சரமாரியாக விளாசியுள்ளது அதிமுக.

கோவை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இதனால் ஸ்டார் தொகுதி ஆகியுள்ளது கோவை நாடாளுமன்றத் தொகுதி. இதனால் பரபரப்புக்கு நாளுக்கு நாள் பஞ்சமில்லை. அண்ணாமலை, கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்பு மனுவில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Annamalai who claims to have studied at IIM but does not know basics aiadmk attacks

அண்ணாமலை வேட்பு மனு குளறுபடி: தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலை வேட்பு மனுவில் விவரங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி, அதிமுக நாதக உள்ளிட்ட கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அண்ணாமலைக்கான வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது என்பது வேட்புமனுவில் முறையாக தெரிவிக்கப்படவில்லை, அண்ணாமலையின் வேட்பு மனுவும் முழுமையாக முறையாகவும் நிரப்பப்படவில்லை. எனவே அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எனினும், அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Annamalai who claims to have studied at IIM but does not know basics aiadmk attacks

அதிமுக புகார்: இந்நிலையில், கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக மனு கொடுத்துள்ளது. மேலும், அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர உள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர், "அண்ணாமலை வேட்பு மனுவில் தவறுகள் இருப்பதாக கூறி அவரது மனு பரிசீலனையை நிறுத்தி வைக்க கோரினோம். தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார்.

அடிப்படையிலேயே தவறு செய்த அண்ணாமலை: தேர்தல் வேட்பு மனு பிரமாண பத்திரங்கள் ஃபார்ம் 26, Non Judicial பத்திரத்தில் போட வேண்டும். நீதிமன்றம் அல்லாத முத்திரைத் தாளில் தான் போட வேண்டும். ஆனால், ஐ.ஐ.எம்-ல் படித்ததாகவும் உலகிலேயே பெரிய புத்திசாலி என்பது போலவும் பேசும் அண்ணாமலை, நீதிமன்ற கட்டண பத்திரத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.

Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்கான, 'India Court Fee' பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

நேற்று இரவு வரை, அண்ணாமலை தாக்கல் செய்த அஃபிடவிட்டை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் வைத்திருந்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது இப்போதுதான் புரிகிறது. Court Fee' பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதன் காரணமாகவே அதனை தாமதமாக பதிவேற்றியுள்ளனர்.

ஐ.ஐ.எம்மில் படித்தவரா இப்படி?: எத்தனையோ, சுயேட்சை வேட்பாளர்கள், கையெழுத்து கூட போடத் தெரியாதவர்கள் கூட தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால், IIM-ல் படித்திருக்கிறேன், ஐபிஎஸ் பாஸ் பண்ணியிருக்கேன், எனக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்லும் அண்ணாமலை, நீதிமன்றக் கட்டண பத்திரத்தில் போட்டுள்ளார்.

நீதிமன்ற முத்திரைத்தாள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தும் பத்திரம். இதில் எப்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்? இதை தேர்தல் அலுவலர் கவனிக்கவில்லையா அல்லது, கவனித்தும், ஆளும் பாஜகவுக்கு கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

அவசர அவசரமாக: அண்ணாமலை வேட்பு மனுவில் குளறுபடி இருக்கிறது என்று சொன்னோம். ஆனால், எங்கள் ஆட்சேபனையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக அவசர அவசரமாக அண்ணாமலை வேட்பு மனுவை இதனால் தான் ஏற்றார்களா என்று சந்தேகம் வருகிறது.

கோவை மக்களே: நான் ஜெயித்தால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என கோவை மக்களிடம் வாக்குறுதி அளிக்கிறார் அண்ணாமலை. ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெற்றாலும், தவறான ஸ்டாம்ப் பேப்பரில் அஃபிடவிட் தாக்கல் செய்ததால் அவரது வெற்றி உறுதியாக செல்லாது என அறிவிக்கப்படும். எனவே கோவை மக்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம்.

படித்தும் தற்குறியாக இருக்கும் அண்ணாமலைக்கு வாக்குகளை செலுத்தி வீணாக்கி விடாதீர்கள். எங்கள் மாநில தலைமை அலுவலகம் மூலம் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளோம். விரைவாக நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்வோம்." எனத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+