இளையராஜாவின் இசையே அருமருந்து.. இசைஞானியை சந்தித்தது என் வாழ்நாள் பாக்கியம்.. நெகிழும் அண்ணாமலை!
கோவை: வருங்கால தலைமுறைக்கும் இளையராஜாவின் இசையே அருமருந்தாக இருக்க போகிறது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானி இசையின் துணை கொண்டே கடக்கிறோம் என்று கூறிய அவர், இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றது மிகப்பெரிய பாக்கியம் என்றும் கூறியுள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்காக கோவை வந்துள்ள இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

அப்போது இளையராஜா பேசுகையில், நான் பேச்சாளர் அல்ல.. பாட்டாளி.. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுபவன், வேலை செய்பவன். என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு. என் பாடு பாட்டாகின்றது. கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு ஆர்மோனியம் வாசிக்காத இடங்கள் இல்லை. இந்த ஆர்மோனியம் கூட கோவையில் செய்ததுதான்.
என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார். ஒப்போது வரை என்னிடம் அந்த ஆர்மோனியம் இருக்கிறது. அதனையே பயன்படுத்தி வருகிறேன். கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என்று சொல்ல கூடாது. ஏனென்றால் கோவையை நான் பிரிவதே கிடையாது என்று தெரிவித்தார். இந்த சூழலில் கோவையில் இருக்கும் இளையராஜாவை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பில், இசைஞானி இளையராஜாவை சந்தித்து அண்ணாமலை நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என்று பதிவிட்டுள்ளார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அண்ணாமலை குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இன்று மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் நிலையில், கோவையில் அண்ணாமலை இளையராஜாவை சந்தித்திருக்கிறார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications