இளையராஜாவின் இசையே அருமருந்து.. இசைஞானியை சந்தித்தது என் வாழ்நாள் பாக்கியம்.. நெகிழும் அண்ணாமலை!
கோவை: வருங்கால தலைமுறைக்கும் இளையராஜாவின் இசையே அருமருந்தாக இருக்க போகிறது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானி இசையின் துணை கொண்டே கடக்கிறோம் என்று கூறிய அவர், இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றது மிகப்பெரிய பாக்கியம் என்றும் கூறியுள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்காக கோவை வந்துள்ள இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

அப்போது இளையராஜா பேசுகையில், நான் பேச்சாளர் அல்ல.. பாட்டாளி.. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுபவன், வேலை செய்பவன். என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு. என் பாடு பாட்டாகின்றது. கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு ஆர்மோனியம் வாசிக்காத இடங்கள் இல்லை. இந்த ஆர்மோனியம் கூட கோவையில் செய்ததுதான்.
என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார். ஒப்போது வரை என்னிடம் அந்த ஆர்மோனியம் இருக்கிறது. அதனையே பயன்படுத்தி வருகிறேன். கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என்று சொல்ல கூடாது. ஏனென்றால் கோவையை நான் பிரிவதே கிடையாது என்று தெரிவித்தார். இந்த சூழலில் கோவையில் இருக்கும் இளையராஜாவை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பில், இசைஞானி இளையராஜாவை சந்தித்து அண்ணாமலை நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என்று பதிவிட்டுள்ளார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அண்ணாமலை குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இன்று மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் நிலையில், கோவையில் அண்ணாமலை இளையராஜாவை சந்தித்திருக்கிறார்.
-
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications