உதயநிதிக்கு எப்பவுமே ரெய்டு பயம்.. 2011 தேர்தல் பிளாஷ்பேக் சொன்ன நயினார் நாகேந்திரன்
கோவை: முதல்வருக்கும், உதயநிதிக்கும் அமலாக்கத்துறை மீது எப்போதும் பயம் இருக்கிறது அப்படி பயமில்லை என்றால் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் ஏன் லண்டன் தப்பிச் செல்ல வேண்டும் என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்துள்ளார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில்,"என்னுடைய அருமை நண்பர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளேன். டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சரின் நண்பர்கள் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத் துறை ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் லண்டன் சென்று விட்டனர். இன்னும் சிலர் அவர்கள் லண்டன் எல்லாம் செல்லவில்லை, இங்கு தான் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இடைக்கால தடை வாங்கப்பட்டிருப்பதால் அதைப்பற்றி விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று வசனம் பேசுகிறார். ஆனால் 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அங்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. மாடியில் அமலாக்கத்துறை ரெய்டும், கீழே கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அன்றைக்கும் அமலாக்கத்துறைக்கு பயந்து தான் பேச்சுவார்த்தையை முடித்தார்களா என தெரியவில்லை.
அதனால் உதயநிதிக்கு அப்போதிருந்தே அமலாக்கத்துறை மீது பயம் உள்ளது. அப்படி பயம் இல்லை என்றால் ரித்திஷ், ஆகாஷ் ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். எந்த ஆட்சி நடைபெற்றாலும் உரிய நீதி வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ராஜ்யசபா தேர்தல், கூட்டணி ஆகியவற்றை பற்றியெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் சொல்ல முடியாது. அதுகுறித்து எங்களின் தலைமை முடிவு செய்யும்.
எங்களிடம் தற்போது 4 சீட்கள் உள்ளன. ராஜ்யசபா தேர்தல் குறித்து தலைமையில் என்ன உத்தரவு கொடுக்கிறார்களோ அதை பின்பற்றுவோம். நாங்கள் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான சிரமங்கள் இருக்கின்றன என்று நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றால் தொழில்துறை முடங்கியுள்ளது.
பலருக்கு தொழிற்சாலையை நடத்த முடியாத நிலை நெருக்கடி உள்ளது. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளுமே ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன்.
கல்வி நிதி பிரச்னையால் மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் அண்மையில் தான் டெல்லி சென்றுள்ளார். அப்போதே அவரிடம் இதைப்பற்றி விளக்கியிருப்பார்கள். ஆண்டுதோறும் கொடுக்கப்படக் கூடிய தொகையை கொடுத்து விட்டோம். நகைக் கடன் கட்டுப்பாடுகள் மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்." என்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications