‛ஏதோ கேள்விபட்டேன்’ சித்தார்த் குறித்த கேள்விக்கு மழுப்பிய நடிகை ராதிகா! என்ன இப்படி சொல்றாங்க?
கோவை: காவிரி பிரச்சனைக்கு நடுவே பெங்களூரில் சித்தா திரைப்படத்தின் புரோமேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் பாதியில் வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுகுறித்த கேள்விக்கு ராதிகா மழுப்பியபடி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை வெடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மண்டியா, பெங்களூரில் பந்த் நடத்தப்பட்டது.

அதன்பிறகு கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இருமாநிலங்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நடிகர் சித்தார்த் தான் நடித்த ‛சித்தா' திரைப்படம் குறித்த பெங்களூர் புரோமேஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் புகுந்து காவிரி விவகாரம் பற்றி பேசி பாதியில் வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்நிலையில் தான் கோவையில் இன்று நடிகை ராதிகா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி விவகாரம் குறித்தும், பெங்களூரில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛காவிரிவிவகாரத்தில் போராட்டம் நடத்தினால் ஆதரவு என சமுத்திரக்கனி கூறியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ராதிகா, ‛‛நான் பார்க்கவில்லை'' என்றார். இதையடுத்து ‛‛காவிரி விஷயத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கன்னட நடிகர், நடிகைகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்துள்ளார்கள். சித்தார்த் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். சித்தார்த்துக்கு தமிழ்நாட்டில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் எந்தவித ஆதரவும் கொடுக்கவில்லை'' என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ராதிகா, ‛‛அப்படியா.. எனக்கு கடந்த 3 நாட்களாக உடல்நலம் சரியில்லை. அதோடு விளம்பரம் தொடர்பான பணியில் பிஸியாக இருந்தேன். ஏதோ கேள்விபட்டேன் சித்தார்த் பற்றி. சித்தார்த் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருந்தார்'' என்றார். இந்த வேளையில், பத்திரிகையாளர் ‛வெளியே போங்க' என கூறியதாக தெரிவித்தார். அதற்கு ராதிகா, ‛‛தண்ணீர் பிரச்சனை பற்றி பேசினார்கள். வெளியே போங்கள் என சொல்லவில்லை. தண்ணீர் பிரச்சனை பற்றி பேசியதை மட்டும் நான் பார்த்தேன்'' என்றார்.
அதன்பிறகு ‛‛காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?'' என வினா எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா, ‛‛இதெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் மூலம் எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி அந்தந்த அரசாங்கள் தான் பார்த்து செய்ய வேண்டும்'' என்றார்.
இறுதியாக, ‛‛33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை எப்படி பார்க்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா, ‛‛நீண்ட ஆண்டுகளாக இதுபற்றி பேசப்பட்டது. இன்று நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் அதனை சரியாக செயல்பட வேண்டும்'' என்றார். இதையடுத்து ‛‛2029ல் நடைமுறைக்கு வரும் என சொல்கிறார்களே'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛குட்.. அம்மி கல்லை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளினால் தான் நகரும் என சொல்வார்கள். அதுபோல் தள்ளிக்கொண்டே இருப்போம்'' என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications