பேட்டரியில் விடுதலைப் போராட்ட வீரர்கள்...அசத்திய கோயம்புத்தூர் கலைஞர்!!
கோயம்புத்தூர்: இந்த தலைமுறையினர் சுதந்திர தின தலைவரை பற்றி அறிய வேண்டும் என்பதற்காக கோயம்புத்தூரைச் சேர்ந்த கலைஞர் ராஜா பேட்டரியில் பல விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவத்தை வரைந்து, பெயின்ட் அடித்துள்ளார்.
நாட்டின் 74வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டின் அனைத்து நகரங்களும் பாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களைப் பற்றியும் தெரியவில்லை. பாடப் புத்தகத்தில் படித்தாலும், அதுகுறித்த ஆழ்ந்த அறிவு இருப்பதில்லை.
இதனால் இந்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த கலைஞர் சிறிய பேட்டரியில், சுதந்திர தியாகிகளின் உருவத்தை வரைந்து, பெயின்ட் அடித்துள்ளார். இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து தெரிவதில்லை என்கிறார்.
சுதந்திர தினம்...தேசியக் கொடியின் பிறப்பு... வடிவமைத்தவர்... ஸ்வாரஸ்ய தகவல்கள்!!
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரின் உருவத்தை வரைந்துள்ளார். அதற்கு பல வண்ணங்களில் பெயின்ட் அடித்துள்ளார்.