லஞ்சத்தை அப்படியே பேன்ட் பாக்கெட்ல வைங்க.. வசமாக சிக்கிய கோவை பேரூர் தாசில்தாரர்
கோவை: தமிழ்நாடு அரசுத்துறைகளில் லஞ்சம் அதிகரித்துள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கோவையில் கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடிபட்டார். இந்நிலையில் பேரூர் தாசில்தார் ரமேஷ்குமார் லஞ்சம் வாங்கும்போது வசமாக சிக்கியுள்ளார். ரூ.50,000 லஞ்சம் வாங்கும்போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
கோவை பேரூர் தாலுகா மாவட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. அங்கு புகழ் பெற்ற பேரூர் கோயில், ஈஷா யோகா மையம், காருண்யா கல்வி நிறுவனம், வெள்ளியங்கிரி மலை கோயில், கோவை குற்றலாம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை பேரூர் பெற்று வருகிறது. இதனால் பேரூர் தாலுகா அலுவலகத்துக்கு தினசரி ஏராளமான மக்கள் வருவது வழக்கம்.

ஒப்புதல்
ரமேஷ் குமார் என்பவர் தாலுகா தாசில்தாரராக உள்ளார். அங்கு ரஞ்சித் குமார் என்கிற தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஆவண விடுவிப்பு தொடர்பாக விண்ணபித்துள்ளார். அதற்கு கீழ்நிலை ஊழியர்களால் ஆவணங்கள் அளித்து ஒப்புதல் கொடுத்துவிட்டனர். ஆனால் இறுதி ஒப்புதல் மட்டும் கொடுக்காமல் காத்திருப்பில் வைத்துள்ளனர்.
50 ஆயிரம் லஞ்சம்
இதுதொடர்பாக ரஞ்சித் குமார், தாசில்தாரர் ரமேஷ் குமாரை சென்று சந்தித்துள்ளார். அப்போது ஒப்புதல் கொடுக்க ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரமேஷ் குமார், ரஞ்சித்திடம் கூறியுள்ளார். இதற்கு ரஞ்சித் தயங்கிய போதும் ரமேஷ் குமார் லஞ்சம் வேண்டும் என்று கறாராக கூறியுள்ளார். கடந்த 21 மற்றும் 25 ஆகிய 2 தேதிகளை ரஞ்சித் ரமேஷ் குமாரை சந்தித்துள்ளார்.
ரசாயனம் தடவிய ரூபாய்
அப்போது அவர் 25 ஆம் தேதி (இன்று) ஒப்புதல் கொடுப்பதற்காக அலுவலகம் வந்து ரூ.50,000 லஞ்சம் கொடுக்க ரமேஷ் குமார் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக ரஞ்சித் குமார் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் ரஞ்சித் குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றுள்ளார்.
பாக்கெட்டில் வைத்த லஞ்சம்
அங்கு ரமேஷ் குமாரின் உதவியாளர் சரவணன் என்பவர் லஞ்சப் பணத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்க சொல்லியிருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூர் தாலுகா அலுவலகத்தில் வைத்தே பணம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
லஞ்சப் பணம்
அதில் லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்டது, அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூர் தாசில்தாரர் ரமேஷ் குமார் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Kerala lottery: கேரள சம்மர் பம்பர் 10 கோடி.. குருவாயூர், கோட்டயம், புனலூர், திருவனந்தபுரம்.. வரிசையாக பரிசு மழை தான்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications