SIR.. 2002,2005 வருட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள்.. இன்றும் நாளையும் மிஸ் பண்ணிடாதீங்க
கோவை: SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2002,2005 -ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும் வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இன்று, நாளை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் முழுமையான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முறை -2026 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கீட்டு படிவத்தை வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2002,2005 -ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும் வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பார்கள். இந்த பணிக்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த முகாமில் வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்திட பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி புரிவர். மேலும், வாக்காளர்கள், அவர்களது தாய் -தந்தை அல்லது தாய், தந்தையரின் பெற்றோர் ஆகியோரது பெயர்கள் கடந்த 2002,2005 -ம் ஆண்டு தீவிர திருத்தப் பட்டியலின் போது இடம் பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை கண்டறியவும் உதவி செய்வர்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமை கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் https://voters.eci.gov.in// என்ற இணையதள வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications