செம! கோவையில் காந்திபுரம் உட்பட 3 இடத்தில் வருகிறது சூப்பர் வசதி! இது நிஜமாகவே வேற லெவல்தான்

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்தியாவிலேயே வளரும் நகரங்கள் பட்டியலில் மிக முக்கிய இடத்தில் உள்ள கோவைக்கு அட்டகாசமான திட்டம் வர உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை அடுத்து மிகவும் முக்கியமான நகராகக் கோவை இருக்கிறது. இந்திய அளவிலும் கூட மிக வேகமாக வளரும் நகரங்களில் கோவை டாப் இடத்திலேயே இருக்கிறது.

 Coimbatore corporation is construction three multi-level parking lots

இதனால் கோவை நகரில் மக்கள் தொகை எண்ணிக்கை மிக வேகமாகவே அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை தொழில்நகராக ஒரு பக்கம் வளர்க்கிறது என்றால்.. மற்றொரு புறம் அங்கே இருக்கும் ஐடி நிறுவனங்களும் கூட வேகமாக வளர்ந்தே வருகிறது. இதனால் கோவை பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலும் கூட சென்னைக்கும் கோவைக்கும் இடையே தான் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்படி மிக முக்கியமான நகராக உள்ள கோவைக்கு புது திட்டங்கள் வர உள்ளது.

வேகமாக வளரும் கோவையில் வாகன பயன்பாடும் மின்னல் வேகத்தில் அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் காந்திபுரம் பகுதியில் இரண்டு உட்பட நகரில் மூன்று இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை உருவாக்கக் கோவை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. அதிகரிக்கும் கடைகள், போக்குவரத்து நெரிசல், போதியளவுக்கு வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கடந்த 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் போதே, ​​கிராஸ் கட் சாலையில் லட்சுமி வளாகம் அருகே பல்டி லெவல் பார்கிங் அமைக்கப்படும் என அறிவித்தனர். இருப்பினும், பல்வேறு காரணங்களால் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா சாலையில் அமையும் செம்மொழி பூங்கா வளாகத்தில் இந்த மல்டி பார்கிங்கை அமைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் பூங்காவின் முதற்கட்ட பணிகளுக்காக 172.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பார்கிங் வசதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் மல்டி லெவல் பார்ங்கிங் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கிராஸ் கட் சாலையில் மல்டி லெவல் பார்ங்கிங் அமைக்கும் திட்டத்தைக் கைவிடலாம் என பல அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஒரே பகுதியில் இரண்டு பார்கிங் தேவையில்லை என்பது அவர்கள் வாதம். இருப்பினும், கோவை காப்ரேஷன் கமிஷனர் இரண்டையும் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்" என்றார்.

அதேநேரம் காந்திபுரம் பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் இது தேவை என்பதே ஒரு தரப்பினரின் வாதமாக உள்ளது. மொத்தம் 40 கோடி செலவில் இந்த இரு மல்டி லெவல் பார்கிங் அமைய உள்ளது. ஒவ்வொரு பார்கிங்கிலும் தலா 250 என்று மொத்தம் 500 கார்களை இங்கே பார்க் செய்ய முடியும். இது அதிகரிக்கும் கோவை வாகன நெரிசல் மற்றும் பார்கிங் பிரச்சினைகளுக்குப் பெரிய தீர்வை தரும்.

இந்த 3 மல்டி லெவல் பார்கிங் மையங்களும் ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும். என்றும் இதன் மூலம் விரைவாக ஒருவரால் பார்கிங் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். செம்மொழிப் பூங்காவில் அமையும் மல்டி லெவல் பார்கிங் என்பது அருகே நேரு ஸ்டேடியத்தின் பார்க்கிங் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+