கோவையில் கொடூரம்! மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு! கேரளாவில் தற்கொலை செய்த கணவர்
கோவை: கோவை அருகே மனைவியை சுட்டுக் கொன்ற கணவர், கேரளாவில் உள்ள பாலக்காடு சென்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே கேரள எல்லையில் பட்டணம்புதூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவருக்கு சங்கீதா (41) என்ற மனைவி இருந்தார். ஆசிரியையாக இருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகுமார் இன்று காலை திடீரென சங்கீதாவை ஏர் கன்னால் சுட்டுக் கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்து பாலக்காடு சென்ற கிருஷ்ணகுமார், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எதற்காக இறந்தார்கள் என்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களுக்குள் கடன் பிரச்சினை, இல்லை குடும்பத் தகராறா, என்ன நடந்தது என்பது குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications