கோவை ‘Red Zone'.. டிரோன்கள் பறக்க தடை.. குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரி காரணமாக அதிரடி ஆணை!
கோவை: கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் நாளை (பிப்ரவரி 13) முதல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் வருகையால் கோவையின் முக்கிய பகுதிகளை ரெட் சோன் ஆக அறிவித்து மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர் 2,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், வரும் 15 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. ஈஷாவில் இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் வருகையால் சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேரு நகர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், வீரகேரளம், வடவள்ளி உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் RED ZONEஆக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் நாளை பிப்ரவரி 13 நள்ளிரவு முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 48 மணி நேரம் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல் -
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட் -
கோவை வடவள்ளி நர்ஸ் கனிதா சஸ்பெண்ட்.. சமூக ஆர்வலரால் நடந்த பெரிய ட்விஸ்ட் -
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications