கோவை ‘Red Zone'.. டிரோன்கள் பறக்க தடை.. குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரி காரணமாக அதிரடி ஆணை!
கோவை: கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் நாளை (பிப்ரவரி 13) முதல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் வருகையால் கோவையின் முக்கிய பகுதிகளை ரெட் சோன் ஆக அறிவித்து மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர் 2,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், வரும் 15 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. ஈஷாவில் இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் வருகையால் சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேரு நகர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், வீரகேரளம், வடவள்ளி உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் RED ZONEஆக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் நாளை பிப்ரவரி 13 நள்ளிரவு முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 48 மணி நேரம் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications