“சிறுத்தையே வெளியே வா”.. கோவை திமுகவினர் உற்சாக போஸ்டர்! மீண்டும் கொங்கு கிங் ஆகும் செந்தில் பாலாஜி!
கோவை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் கரூர், கோவை மாவட்ட திமுகவினர் பயங்கர உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜி விரைவில் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட திமுகவினர், செந்தில் பாலாஜியை வரவேற்று பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். மீண்டும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால், அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்து இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், செந்தில் பாலாஜியின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்தும், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக கொடிகளை ஏந்தியபடி பல்வேறு இடங்களிலும் அக்கட்சியினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், செந்தில் பாலாஜி, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில், திமுகவினர் புழல் சிறை முன்பாக திரண்டுள்ளனர். பேண்ட் வாத்தியம் முழங்கி, திமுக கொடிகளுடன் அவர்கள் செந்தில் பாலாஜியை வரவேற்று வருகின்றனர்.
கோவையில் திமுகவினர், செந்தில் பாலாஜியை வரவேற்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். "பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது! சிறுத்தையே வெளியே வா!" என்ற வாசகங்களுடன் கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதுமே, செந்தில் பாலாஜி அவரைச சந்திப்பார் என்றும், அதன் பிறகு அமைச்சரவையில் அவரை இணைப்பதற்கான வேலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் ஆனதுமே, முன்பு போல கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரை போலவே கோவை மாவட்ட திமுகவினரும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதற்குக் காரணம், செந்தில் பாலாஜி மீண்டும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக வருவார் என்பதால் தான் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications