ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
கோவை: ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இதனால் ஸ்டார் தொகுதி ஆகியுள்ளது கோவை நாடாளுமன்றத் தொகுதி. இதனால் நாளுக்கு நாள் கோவை தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது.
ஆரத்திக்கு மறைத்து வைத்து பணம்: இந்நிலையில், கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு ஆரத்தி தட்டிற்கு கீழே மறைத்து வைத்து பணம் கொடுப்பது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் விதிமீறல் என்ற நிலையில், அண்ணாமலை, ஆரத்தி தட்டுக்கு கீழே ரூபாய் நோட்டை மறைத்து வைத்து கைகளில் திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அண்ணாமலை பேச்சு: கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பிற அரசியல் கட்சிகளால் அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கோவையில் பணப்புழக்கம் இருக்கும். ஆனால் நான் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரப்போவதில்லை. வாக்கு சேகரிப்புக்காக பணத்தை செலவு செய்யப் போவதும் இல்லை. அதற்கு பதிலாக மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பதை காட்ட உள்ளேன்" எனப் பேசி இருந்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவு: இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சையும், ஆரத்தி தட்டுக்கு அடியில் வைத்து அவர் பணம் கொடுக்கும் காட்சியையும் பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது தேர்தல் நடத்தும் அலுவலரான கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட வீயியோவை காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications