கோவையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய 148 கிலோ தங்கக்கட்டிகள்!
கோவை: புளியங்குளத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 148 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் தொகுதிகளில் பணம் விநியோகம் செய்வதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணம், மற்றும் நகைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோவை புளியங்குளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று இரவு தீவிர சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 148 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நகைகளை பிரபல தங்க விற்பனை நிறுவனம் சார்பாக, வாடிக்கையாளர் ஒருவருக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தங்க கட்டிகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications