கோவை சிறுமி வழக்கில் 21 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல்.. தடதடக்கும் வழக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக புகார் உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்று 21 நாட்களாகியுள்ள நிலையில், கோவை சிறுமி வழக்கில் போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மே மாதம் 21 ஆம் தேதி 10 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றதில் கார்த்திக் கால் உடைந்தது.

Coimbatore girl sexual case

சிறுமி வழக்கு

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறை 3 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்து விரிவான தகவல்கள், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தடயவியல் அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளை விரைவாகப் பெற்று, நீதிமன்றத்தில் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளில் காவல்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். ஜூன் 12 ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சிறுமி வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறுமி வழக்கில் விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்து, பெரிய தண்டனை வாங்கித்தர அரசு உத்தரவிட்டது. இதனால் காவல்துறை இந்த வழக்கில் தீவிரமாக பணியாற்றி வந்தனர்.

குற்ற பத்திரிகை தாக்கல்

சம்பவம் நடந்து சரியாக 21 நாட்களாகியுள்ள நிலையில், இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 819 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை, இ பைலிங் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் விரைவில் குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் விரைவாக வழக்கு விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+