கோவை மையத்தில் நரம்பு போல விரியும் மெட்ரோ! சிட்டியின் முகமே மாறும்! அடுத்த ஆலந்தூர் கோவை ஜங்சன்தான்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் (கோவை) மெட்ரோ ரயிலின் 2 உயர்மட்ட பாதைகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் ஜனவரி - பிப்ரவரி மாதம் நடக்கும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மூலம் கோயம்புத்தூரில் இந்த மெட்ரோ கட்டப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ முதல் கட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) 2 பாதைகளாக அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இரண்டு வழித்தடங்களும் கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தில் சந்தித்து.. நரம்பு போல இரண்டு பாதைகளாக விரியும். கோவை ஜங்சன் சென்னை ஆலந்தூர் போல முக்கியமான சந்திப்பாக மாறும்.

madurai metro rail thirumangalam

கட்டம் 1 வழிகள்:

வழி-1: உக்கடம் பேருந்து நிலையம் முதல் கோயம்புத்தூர் விமான நிலையம் வரை

நீளம்: 20.4 கி.மீ
வகை: மேல பாலமாக கட்டப்படும் அவிநாசி சாலை வழியாக செல்லும் .
டிப்போ: சேலம் அருகே நீலம்பூர் - கொச்சி பைபாஸ் பகுதியில் கட்டப்படும்.
நிலையங்களின் எண்ணிக்கை: 18
நிலையங்கள்: உக்கடம் பேருந்து நிலையம், டவுன் ஹால், கோயம்புத்தூர் சந்திப்பு, கலெக்டரேட் மெட்ரோ, ஜிகேஎன்எம் மருத்துவமனை, லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளனேடு புதூர், ஃபன் ரிபப்ளிக் மால், ஹோப்ஸ் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சித்ரா வட்டம், எம்ஜிஆர் நகர், பிஎல்எஸ் நகர், வெங்கிடாபுரம், பார்க் பிளாசா, நீலம்பூர் நிலையம் மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையம் வரை செல்லும்.

வழி-2: கோவை சந்திப்பு முதல் வலியம்பாளையம் பிரிவு வரை

நீளம்: 14.4 கி.மீ
வகை: பாலம் - சத்தியமங்கலம் சாலை அல்லது சத்தி சாலை வழியாக செல்லும்.
டிப்போ: சேலம் அருகே நீலம்பூர் - கொச்சி பைபாஸ் அருகே கட்டப்படும்.
நிலையங்களின் எண்ணிக்கை: 14

ஸ்டேஷன் பெயர்கள்: கோயம்பேடு சந்திப்பு, ராம் நகர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மூர் மார்க்கெட், கணபதி புதூர், அத்திபாளையம் சந்திப்பு, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சித்ரா நகர், சரவணம்பட்டி, விஸ்வாசபுரம், விஜிபி நகர் மற்றும் வலியம்பாளையம் வரை செல்லும்.

அனுமதி: கோவை மற்றும் மதுரை மெட்ரோவை தமிழக அரசு தனது பிரதான திட்டங்களில் ஒன்றாக மாற்றி உள்ளது. இதற்கான அதிக முக்கியத்துவத்தை கொடுத்து திட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி மாதமே இதற்காக நிலம் எடுக்க உள்ளனர்.

பெரும்பாலும் அரசு சாலைகள், சாலைகளுக்கு அருகே உள்ள இடங்களில்தான் நிலம் எடுக்க உள்ளனர் என்பதால்.. இந்த பணிகள் எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மதுரை, கோயம்புத்தூருக்கு புதிதாக மெட்ரோ டிபிஆர் தயாரிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட டிபிஆர் ரிப்போர்ட் பல்வேறு தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இதனால் கிடப்பில் கிடந்த திட்டம் தற்போது மீண்டும் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+