திடீர் ட்விஸ்ட்.. சீரியஸ் காட்டும் CMRL.. தீவிரம் எடுக்கும் கோவை மெட்ரோ.. வெளியான முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கான இறுதி விரிவான நிலத் திட்ட அட்டவணையை (LPS) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இரண்டு மாதங்களுக்குள் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட இரண்டு வழித்தடங்களுக்கான செலவு மற்றும் கையப்படுத்தப்பட வேண்டிய நிலங்களுக்கான விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

இத்திட்டத்தில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் அருகிலுள்ள கோயம்புத்தூர் விமான நிலையம் வரை நீண்டுள்ள முதல் வழித்தடமும், கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வாலியம்பாளையம் பிரிவு வரை நீண்டுள்ள இரண்டாம் வழித்தடமும் அடங்கும். இந்த வழித்தடங்களின் மொத்த நீளம் 40 கி.மீ., இதன் மதிப்பிடப்பட்ட செலவு ₹10,740 கோடி ஆகும்.

coimbatore metro

கோயம்புத்தூர் மெட்ரோ

டெக்ஸ் டூல்ஸ் பாலம் முதல் சூரியா மருத்துவமனை வரையிலான 1.4 கி.மீ. நீளத்திற்கு அவசர நிலத் திட்ட அட்டவணை (LPS) தயாரிக்கப்பட்டு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதி ஒரு நெரிசல் நிறைய பகுதியாகும். முன்பு, தேவையான நிலம் 20 மீட்டர் அகலமாக குறிப்பிடப்பட்டது. எல்.பி.எஸ். நிறைவடைந்த பிறகு, அது 30 மீட்டராக திருத்தப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதனால் நெரிசல் ஏற்படுகிறது.

1.4 கி.மீ. நீளப் பகுதிக்கு, நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ திட்டம் ஆகிய இரண்டிற்கும் 2.28 ஏக்கர் தனியார் நிலமும், 0.58 ஏக்கர் அரசு நிலமும் தேவைப்படும். மொத்தம் 40 கி.மீ. தூரத்திற்கான இரு வழித்தடங்களுக்கான முதன்மை நிலத் திட்ட அட்டவணை (LPS) நிறைவடைந்துள்ளதாகவும், நிர்வாக ஒப்புதல் (AS) ஆவணங்கள் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ பாதை

விரிவான நிலத் திட்ட அட்டவணையின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்குள் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டத்தில் அகற்றப்பட வேண்டிய சொத்துக்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படும், தேவையான நிலத்தின் அளவு தீர்மானிக்கப்பட்டு, மற்றொரு இடப்பரப்பியல் வடிவமைப்புடன் சமர்ப்பிப்பதற்கான வகைப்பாடு செய்யப்படும்.

இறுதி கட்டத்தில் சொத்து மதிப்பீடு செய்யப்படும். கள அலுவலர்கள் நிலத் திட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களையும் ஆய்வு செய்து சரிபார்ப்பார்கள். உரிமை, கட்டமைப்பு வகை மற்றும் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மதிப்பீடு செய்யப்படும். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இரு வழித்தடங்களுக்கான இறுதி அறிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி

நிலத்தின் அடியில் உள்ள பயன்பாட்டு அமைப்புகளை ஆய்வு செய்யும் தரை ஊடுருவல் ரேடார் (GPR) ஆய்வு, இரு வழித்தடங்களுக்கும் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சியின் அறிக்கை தெரிவிக்கிறது. ஜி.பி.ஆர். வரைபடங்கள் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இரு வழித்தடங்களுக்கான மேற்பரப்பு அம்சங்களுக்கான மொபைல் லிடார் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்திய முதன்மை நிலப்பரப்பு ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. நிலப்பரப்பு வரைபடங்களும் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இரட்டை அடுக்கு கட்டுமானம்

அவினாசி சாலையில் கோல்ட்வின்ஸ் முதல் நீலாம்பூர் வரையிலான 5 கி.மீ. தூரத்திற்கு முன்மொழியப்பட்ட இரட்டை அடுக்கு கட்டுமானம் குறித்து, ஆணையர் விளக்கமளித்தார். தற்போது, இரண்டு பரிந்துரைகள் உள்ளன: ஒன்று, அவினாசி சாலையின் இடதுபுறத்தில் ஒற்றை அடுக்குடன் தொடர்வது. இருப்பினும், கோல்ட்வின்ஸில் பிரியும் இரட்டை அடுக்கு பாதையை நாம் தேர்ந்தெடுத்தால், விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி தேவைப்படும்.

எனவே, இரு சூழ்நிலைகளுக்கும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது உயர் அதிகாரிகளின் முடிவுகளைப் பொறுத்து மாறலாம்.. நகரின் மேற்கு மண்டலத்தில் மெட்ரோ ரயில் திட்ட அலுவலகம் அமைக்கும் திட்டத்தையும் மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+