4வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்.. குறுக்கே வந்த ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஹோட்டலில் பணியாற்றி வரும் எஸ்தர் என்பவரை 4 வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளருக்கும், எஸ்தருக்கும் இடையே பழக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளரை ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூரை அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த ஆட்டோ ஓட்டுநரான பிரேம் ஆனந்த் என்பவர் எஸ்தரை 4 ஆவதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார் [coimbatore murder].

கொலை முயற்சி
இந்தத் திருமணத்துக்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் எஸ்தரும், ஹோட்டல் உரிமையாளரான திலீபனும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த் கடந்த ஜனவரி மாதம் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும், திலீபனையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்த கொலை முயற்சி சம்பவம் காரணமாக பிரேம் ஆனந்த் சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 17 நாட்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த பிரேம் ஆனந்த் இன்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். இதையடுத்து, எஸ்தர் வீட்டின் கதவைத் திறந்துள்ளார்.
குத்திக் கொலை
அப்போது, அங்கு திலீபன் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலீபனை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயன்றுள்ளார்.
அப்போது, கேஸ் வெடித்த நிலையில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரேம் ஆனந்தைப் பிடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. கரிகால் சங்கர் பாரி மற்றும் சூலூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த திலீபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் கைது
மேலும், காயமடைந்த எஸ்தரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, கொலையாளி பிரேம் ஆனந்தைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications