அப்பார்ட்மென்ட் டார்கெட்.. ஆட்டோ பயணம்.. கோவை அடுக்குமாடி குடியிருப்பு கொள்ளை பின்னணி
கோவை: கோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஒரே நேரத்தில் 12 வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள், எதற்காக கோவை வந்தனர், இந்த கொள்ளை சம்பவத்திற்கு எப்படி திட்டமிட்டனர் என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

துணி வியாபாரம்
விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு காவல்துறை சென்றபோது குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்தனர். இதில் ஒரு காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. எனவே தற்காப்பிற்காக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளோம். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குனியமுத்தூர் பகுதியில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமினிய பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களுடன் இந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளனர். துணி வியாபாரம் செய்வதாக சொல்லி தங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி, ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 மணி நேரத்தில் சம்பவம்
அவர்களின் குற்ற பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரிக்கப்பட்டு, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம். கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான குடியிருப்புகள் இருந்ததால் அங்கு சென்றுள்ளனர். 3 மணி நேரத்தில் திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
உள்ளூர் குற்றவாளிகள் யாரேனும் இவர்களுக்கு உதவியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை பிடித்துள்ளோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் துப்பாக்கியை பயன்படுத்தினோம்.
சிசிடிவி கேமரா
இந்த சம்பவத்தில் பார்த்திபன் என்ற காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நன்றாக இருக்கிறார். குடியிருப்பில் காவலாளிகள் இருக்கும்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கவுண்டம்பாளையம் குடியிருப்பு நிர்வாகிகளிடம் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்." என்றார்.
-
கோவையில் கியாஸ் சிலிண்டர் அடாவடி: மத்திய அரசு விதியை மீறி 36 நாட்களாக உயர்வு.. இல்லத்தரசிகள் ஷாக் -
கோவை அன்னூரில் சாலை விரிவாக்கத்துக்காக 786 ஏக்கர் நிலம்.. காலாவதியான முடிவு.. விவசாயிகள் மகிழ்சசி -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications