அப்பார்ட்மென்ட் டார்கெட்.. ஆட்டோ பயணம்.. கோவை அடுக்குமாடி குடியிருப்பு கொள்ளை பின்னணி
கோவை: கோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஒரே நேரத்தில் 12 வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள், எதற்காக கோவை வந்தனர், இந்த கொள்ளை சம்பவத்திற்கு எப்படி திட்டமிட்டனர் என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

துணி வியாபாரம்
விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு காவல்துறை சென்றபோது குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்தனர். இதில் ஒரு காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. எனவே தற்காப்பிற்காக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளோம். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குனியமுத்தூர் பகுதியில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமினிய பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களுடன் இந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளனர். துணி வியாபாரம் செய்வதாக சொல்லி தங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி, ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 மணி நேரத்தில் சம்பவம்
அவர்களின் குற்ற பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரிக்கப்பட்டு, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம். கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான குடியிருப்புகள் இருந்ததால் அங்கு சென்றுள்ளனர். 3 மணி நேரத்தில் திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
உள்ளூர் குற்றவாளிகள் யாரேனும் இவர்களுக்கு உதவியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை பிடித்துள்ளோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் துப்பாக்கியை பயன்படுத்தினோம்.
சிசிடிவி கேமரா
இந்த சம்பவத்தில் பார்த்திபன் என்ற காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நன்றாக இருக்கிறார். குடியிருப்பில் காவலாளிகள் இருக்கும்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கவுண்டம்பாளையம் குடியிருப்பு நிர்வாகிகளிடம் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்." என்றார்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications