Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி ரோட்டில் "அது" பக்கத்திலேயே உட்கார்ந்துட்ட பெயிண்டர்! கோவை சாக்கடைக்குள் ஸ்வேதா பட்ட பாடு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே குடும்ப வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன. கணவன் மனைவிக்குள் எழும் தகராறுகள், அதையொட்டிய கொலைகள், தற்கொலைகள், விவாகரத்துகள் என பெருகி வருகின்றன.. இதற்கு பெரும்பாலும் கள்ளக்காதல், சந்தேகம், புரிதல் குறைபாடுகள் காரணமாக உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, அம்மாவட்ட மக்களை பதற வைத்து வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது மரப்பேட்டை என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் பாரதி என்பவருக்கு 27 வயதாகிறது.. இவர் பெயிண்ட்டராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் சுவேதா.. அவருக்கு 26 வயதாகிறது..

Coimbatore Kovai Pollachi Main Road

பாரதியும், சுவேதாவும் 9 வருடங்களுக்கு முன்பே தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு தற்போது கிரேஷ்(9), கேப்ரியல்(7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

கோவை பொள்ளாச்சி ரோடு

குடும்ப சூழ்நிலைக்காக அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கடையில் சுவேதா வேலை செய்து வருகிறார்.. ஆனால், சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.. இந்த சந்தேகம் தம்பதிக்குள் தகராறாக வெடித்து வந்துள்ளது..

தினந்தோறும் இருவருக்குள்ளும் சண்டை வெடித்து வந்ததால், ஸ்வேதா மனம் வெறுப்படைந்து கணவனை பிரிந்து வாழ முடிவு செய்தார்.. இதற்காக ஏபிடி ரோட்டில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் சுவேதா அங்கு வசித்து வருகிறார்.. குழந்தைகளும் அங்குள்ள பள்ளியிலேயே படித்து வருகிறார்கள்.

காதல் தம்பதி

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் குழந்தைகளை அழைத்து சென்று ஸ்கூலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார்.. உடனடியாக தான் வேலை பார்க்கும் கடைக்கு கிளம்பி சென்றார்.. அப்போது தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த பாரதி, ஸ்வேதாவை வழிமறித்து நிறுத்தியிருக்கிறார்.

தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ஸ்வேதாவை அழைத்திருக்கிறார் போலும்.. ஆனால், அதற்கு சுவேதா மறுத்துள்ளார்.. உடனே மறுபடியும் தெருவிலேயே வாக்குவாதம் வெடித்துள்ளது.. பிறகு கடைக்கு நேரமாவதால், அங்கிருந்து சுவேதா புறப்பட்டு சென்றார். ஆனாலும் பாரதி விடவில்லை..

ஸ்வேதாவை விரட்டிய பாரதி

ஸ்வேதாவை விரட்டியபடியே சென்று தகராறு செய்தார்.. பிறகு ஆவேசமடைந்து மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, சுவேதாவை குத்த முயன்றார்.. கத்தியை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, கத்தி கூச்சலிட்டார்.. அவரது கதறலை கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்து பாரதியை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றார்..

ஆனால் பாரதியோ எதற்கும் அசராமல், யாராவது கிட்ட வந்தால், குத்தி கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்..

கத்தியுடன் ஆக்ரோஷமாக நின்ற பாரதியை கண்டு பயந்துபோன பொதுமக்களும், அவரிடம் செல்லவில்லை.. எனவே உடனடியாக பொள்ளாச்சி போலீசுக்கு உடனே தகவல் அளித்தனர்.. ஆனால், ஆவேசம் அடங்காமல் இருந்த பாரதி, கண்ணிமைக்கும் நேரத்தில் சுவேதாவின் உடலில் சரமாரியாக குத்தினார்..

சாக்கடைக்குள் ஸ்வேதா

இதில் வலி தாங்க முடியாமல் சுவேதா, ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்து துடிதுடித்தார்.. அப்போதும் ஸ்வேதா மீதான ஆத்திரம் அடங்காத பாரதி, உயிருக்கு போராடி கொண்டிருந்த ஸ்வேதாவை, பக்கத்திலிருந்த சாக்கடைக்குள் தள்ளினார்.. அப்போதும் ஆவேசம் அடங்காமல், அவரது கழுத்தை நெரித்தார்.. பிறகு தன்னுடைய கால்களால் கழுத்தை முறித்தார்.. சில நிமிடங்களிலேயே ஸ்வேதாவின் மூச்சு அடங்கியது..

பிறகு சாக்கடைக்குள்ளிருந்த ஸ்வேதாவின் சடலத்தை எடுத்து, சாலையில் கொண்டு வந்து போட்டுவிட்டு, அங்கேயே நின்று கொண்டிருந்தார்... பிறகு சடலம் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்.. அதற்குள் போலீசார் விரைந்து வந்து பாரதியை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்..

அப்போது ஸ்வேதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் தந்தார்.. பிறகு போலீசார் சுவேதாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை சிங்காநல்லூரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கைது செய்யப்பட்ட பாரதியிடம் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+