Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் ஈஷா சத்குருவின் மகிழ்ச்சி சொற்கள்.. இன்று கரையும் தடைகள்.. மலரும் புத்தி! சிறப்பான வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த நாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும் என்றும் தன்னுடைய வாழ்த்து செய்தியில் ஆசி வழங்கியிருக்கிறார்..

ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வாழ்த்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.. அதில், தடைகளை தகர்ப்பது எப்படி என்பது குறித்தும் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.

Coimbatore Kovai Sadhguru

சதுர்த்தி வாழ்த்துக்கள்

அதில், "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். பருவமழை முடிந்து கார்மேகங்கள் விலகும்போது, நாடு முழுவதும் மக்கள் ஆனைமுகத்தானை உற்சாகமாக கொண்டாட தயாராவர்கள். இப்படி விழாக்கோலமும் பலகாரங்களும் நிறைந்திருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள கதை வெறும் புராணமாக இல்லாமல், புத்தி, படைப்பாற்றல், மாற்றத்தின் மகத்தான அறிகுறியாக விளங்குகிறது.

கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன், பார்வதியையும் இல்லத்தையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும் தாய்மை ஏக்கமும் கொண்ட பார்வதி, தன் உடலில் பூசிய சந்தனத்தை மண்ணுடன் கலந்து பிள்ளை வடிவில் பிடித்து, அதற்கு உயிரூட்டுகிறாள்.

பார்வதியின் பாலகன்

பல ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய சிவன், பார்வதியின் பாலகனை யாரென அறியாமல் வாசலில் சந்திக்கிறார். கோபத்தில் பாலகனின் தலையை துண்டித்து விடுகிறார். இதனால் பார்வதியின் துயரமும் ஆத்திரமும் தீவிரமாகிறது. இதை சரிசெய்ய, சிவன் தனது கணங்களின் தலைவரின் தலையை பாலகனுக்கு மாற்றி உயிர்ப்பிக்கிறார்.

சிவ கணங்கள், எலும்பில்லாத கைகளுடன் வேற்றுகிரக உருவம் கொண்டவை, இதுவே ஓவியர்கள் விநாயகரை ஆனைமுகத்துடன் சித்தரிக்க காரணமானது. ஆனால், மந்திரங்களும் பக்திப் பாடல்களும் அவரை கணபதி என்றே அழைக்கின்றன, கஜபதி என்று அல்ல.

இவ்வாறு விநாயகர், பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.

புத்திசாலித்தனம் - விக்னேஸ்வரன்

விநாயகர் - விக்னங்களை, அதாவது தடைகளையெல்லாம் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்றும் வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தமல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் கரைந்து படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமோ சாமர்த்தியமோ அல்ல, பிரபஞ்சத்துடன் ஒத்திசைவாக இருப்பதைக் குறிக்கிறது. உள்ளுக்குள் அமையும் சமநிலையால் உள்ளும் வெளியும் வாழ்க்கை சுகமாகிறது.

இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகம். பக்தர்கள் பல நாட்கள் விநாயகர் சிலைகளை வடித்து, ஆடல் பாடலுடன் ஆராதித்து, உணவு படைத்து, பக்தியுடன் கொண்டாடுவார்கள். இவ்விழா சிலையை நீரில் கரைப்பதுடன் நிறைவடைகிறது. சிலை வடிப்பது பார்வதி பிள்ளையாரை படைத்ததையும் நீரில் அமிழ்த்துவது சிவனின் அழித்தலையும் புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை சேர்ந்து உருவாக்கம், கற்றல், விடுவிப்பு என்ற சுழற்சியைக் குறிக்கிறது.

உருவமற்ற தன்மைகள்

உண்மையான புத்திசாலித்தனம் என்பது இறுக்கமானதோ பற்றுதலோ அல்ல, மாறாக நீரைப் போல இளகிய, கட்டுகள் அற்றது என இவ்விழா மூலம் கற்றுக் கொள்கிறோம். இது தொடர்ச்சியாக படைப்பிற்கு உட்பட்டு, பின் கரைந்து போகும் உயிர்த்தன்மையை ஒத்தது. இது உருவங்களை கண்மூடித்தனமாக பற்றாமல், அவற்றின் குணங்களை உள்வாங்கி, பின் விட்டுவிட வேண்டும் என்கிறது.

விநாயகர் சதுர்த்தி, உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாகும். உண்மையான புத்திசாலித்தனம், அறிவு சேகரிப்போ சாமர்த்தியமோ அல்ல, மாறாக பிரபஞ்சத்துடன் ஒத்திசைந்து வாழும் திறனாகும். எதிர்ப்பின்றி மிதந்து, தடைகளை படிக்கற்களாக மாற்றி, கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவதாகும்.

படைப்பின் சமநிலை

இத்திருநாளில் கொழுக்கட்டைகளை ருசித்து, விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். அதேவேளை, கணபதி உணர்த்தும் ஆழ்ந்த பொருளை உள்வாங்குங்கள்: தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்" என்று சத்குரு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+