Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊருக்கு போறீங்களா மக்களே? கோயம்புத்தூருக்கு வந்தது ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசின் சரவெடியை பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.

Coimbatore Special Buses on the occasion of Onam, Weekends, by Tamil Nadu Transport Department

சிறப்பு பஸ்கள்: 10 நாட்களுக்கு முன்புகூட, சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் கிடைத்தன.. அதாவது, 12ம் தேதி சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை 13ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதுமட்டுமல்லாமல், ஆடி மாதம் என்பதால், நிறைய பேர், கோயில் திருவிழாக்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காகவே, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பஸ்கள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், லீவு முடிந்து, சொந்த ஊரிலிருந்து கிளம்பி வருவதற்கும் பஸ்கள் பிரத்யேகமாக விடப்பட்டிருந்தன. 4 நாட்களுக்கு முன்பும், ஆவணி சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

பண்டிகை காலம்: இந்நிலையில், இப்போது வார இறுதி வரப்போகிறது. அத்துடன், ஓணம் பண்டிகையும் நெருங்கிவிட்டது.. பொதுவாக இப்படி பண்டிகை காலங்களில் அனைத்து போக்குவரத்துகளிலம் மக்கள் கூட்டம் அலைமோதும்.. அதனால்தான், மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை + வார இறுதி நாட்கள் + சுப முகூர்த்த திருநாள் என மொத்தமாக சேர்ந்துவருகிறது. அதன்படி, நாளை முதல் அதாவது, 26, 27, 29ம் தேதிகளில் விடுமுறை நாளாகிறது.

இதையடுத்து, கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.. கோவையில் இருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியதாவது:

அறிவிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாட்கள், சுப முகூர்த்தம் (26.08.2023 மற்றும் 27.08.2023) மற்றும் ஓணம் பண்டிகை (29.08.2023) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+