அதே நாள்.. அதே இரவு.. கோவை மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் செய்த கொடூர கொலை
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கடந்த மாதம் மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே நாளில் அந்த 3 பேரும் மற்றொரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் அருகே கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு, தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் மூன்று பேர் கொண்டு கொடூர கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்கிற சதீஷ் (30), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ( 28), மற்றும் தவசி என்கிற குணா ஆகியோர் காவல்துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

மாணவி பாலியல் வழக்கு
கைது செய்யப்பட்ட 3 பேரும் சகோதரர்கள் ஆவர். கோவில்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, மதுபோதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டதால் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது. இதையடுத்து கோவை நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 3 பேரையும், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே நாளில் அந்த கும்பல் மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நாளில் கொலை
இதுகுறித்து கோவை காவல்துறையினர் கூறுகையில், "ஆரம்பத்தில் அந்த மூன்று குற்றவாளிகளும் மாறி மாறி தகவல் கூறி குழப்பி வந்தனர். அன்னூர் அருகே ஆட்டு வியாபாரியை கடந்த 2 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று அவரின் மனைவி கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரும் அன்றைய தினம் இரவு அங்கு தான் இருந்துள்ளார்.
செரையாம்பாளையம் உள்ள தேவராஜ் ஆட்டு பண்ணையை ஒட்டி தான் இரவு தங்குவார். அன்றைய தினமும் தேவராஜ் ஓய்வுக்காக சென்றபோது இவர்கள் பேரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சியான தேவராஜ் அவர்கள் யார் என்ன என்று விசாரித்து கண்டித்துள்ளார். அப்போது தலைக்கேறிய மதுபோதையில் இருந்த அந்த கும்பல் தேவராஜை கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
ஆட்டு வியாபாரிக்கு நடந்த சோகம்
தேவராஜை அன்றைய தினம் அவர் மனைவி தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் தேவராஜின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நவம்பர் 6 ஆம் தேதி கோவில்பாளையம் எல்லையில் தேவராஜின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் இவர்கள் அதை மேலோட்டமாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் விரிவான விசாரணை நடத்த கோவில்பாளையம் காவல்துறையினர் முடிவு செந்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொலை வழக்கில் அவர்களை காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவராஜை கொலை செய்துவிட்டு, அவர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். " என்றார்கள்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications