கோவையில் வீட்டுமனை வரன்முறை.. பெரியநாயக்கன்பாளையத்தில் பெரிய சம்பவம்.. அதிகாரி சிக்கியது எப்படி?
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து வரி வசூலர் சதீஷ்குமாரின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரியான 53 வயதாகும் ஆனந்தவேல் என்பவர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனையை வரன்முறைப்படுத்தக்கோரி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அண்மையில் விண்ணப்பித்தார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக (வரி வசூலர்) பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர், அந்த மனையை உள்ளூர் திட்டக் குழுமத்தின் மூலமாக வரன்முறைப்படுத்த கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறினாராம். இதுதவிர வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தவேல் அவ்வளவு பணம் தர இயலாது என கூறியுள்ளாராம்.
இதனால் அவரது வீட்டு மனையை வரன்முறைப்படுத்தாமல் சதீஷ்குமார் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து முறையிட்டாராம். ஆனால் அதன்பின்பும் ஆனந்தவேலின் வீட்டுமனை வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது . இதையடுத்து ஆனந்தவேல் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பில் கலெக்டரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி ரூ.40 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தவேலிடம் கொடுத்தனர்.
இந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட ஆனந்தவேல் நேற்று பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை மறைந்திருந்து கண்காணித்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மற்றும் போலீசார், சதீஷ்குமாரை பிடித்து கைது செய்தனர்.பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். சோதனையின் விவரங்கள் வெளியாகவில்லை..இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications