இதுதான் நம்ம தமிழ்நாடு.. கோவையில் வெளிப்பட்ட இந்து-முஸ்லிம் ஒற்றுமை.. நேசத்தால் நெகிழும் துடியலூர்
கோவை: கோவை துடியலூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நேற்றைய தினம் நடந்துள்ளது.. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படும் விழா என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. இந்த நிகழ்வின்போது நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது இணையவாசிகளையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது.
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை என்றாலே, திருப்புவம் முதுவந்திடல் கிராமம் முதல் தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமம் வரை களைகட்டிவிடுவது இயல்பாகும்.. காரணம், இங்குள்ள இந்துக்களும் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்து முஸ்லிம்
ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் பல்லாண்டு காலமாக சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.. தை மாதம் அறுவடையாகட்டும், திருமணங்கள், தொழில் துவங்குவது என எந்த நிகழ்வாகட்டும் பள்ளிவாசலில் வந்து அனுமதியை பெற்ற பிறகே இந்துக்கள் அவைகளை அங்கு ஆரம்பிப்பார்கள்.
அதுபோலவே, இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடனை செலுத்துவர். இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருந்து, வேண்டுதல் நிறைவேறிய பிறகே, விறகு கட்டைகளை தானமாக தருகின்றனர்..
பிள்ளையார் சதுர்த்தி - தீக்குழி
பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.

பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் பூஜை பொருட்களை வழங்குவார்கள்.. அதுமட்டுமல்ல பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்கள் போன்றவற்றை வைத்து, இந்துக்களின் வீடுகளுக்கு நேரிலேயே கொண்டு சென்று வழங்குவார்கள்.. இந்த ஒவ்வொரு நிகழ்வும் இந்து-முஸ்லிம் சகோதர ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கின்றன.
கோவை துடியலூர் அரவான் கோயில்
இந்நிலையில், கோவை மாவட்டம் துடியலூரிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது.. கோவை துடியலூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது..
இதுமிகவும் பிரபலமான கோயிலும் கூட.. இந்த கோயிலில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்த வருடத்துக்கான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி
அப்படித்தான் நேற்று மாலை திருவிழா முடிந்து கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்..
இந்த கோவிலுக்கு பக்கத்திலேயே 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பள்ளிவாசல் உள்ளது.. அந்த பள்ளிவாசல் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றபோது, அங்கு மாலை தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் மனிதநேயத்தின் அடையாளமாக அந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தந்தனர்.. மேலும் பலர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.. ஊர்வலமாக சென்ற பக்தர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மதங்களை தாண்டிய இந்த அன்பும் ஒற்றுமையும் நிரம்பிய செயல், திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.. திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர், இஸ்லாமியர்களின் இந்த மனிதநேயத்தை பாராட்டியபடியே சென்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications