இப்படி ஓர் ஒற்றுமையா.. 10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்.. அசத்திய கோவை இரட்டை சகோதரிகள்
கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் கவிதா, கனிஹா ஆகிய இருவரும் 474 ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கணிதம் பாடத்திலும் இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுத்து அசத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 10 ஆம் வகுப்பு தேர்வை 4,35,119 மாணவிகள் 4,36,120 மாணவர்கள் உள்பட 8,71,239 பேர் எழுதினார்கள். இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88 சதவீதம், மாணவர்கள் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1,867 அரசுப்பள்ளிகள் உள்பட 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், விருதுநகர் (97.45%), தூத்துக்குடி(96.76%), கன்னியாகுமரி(96.66%), திருச்சி(96.61%) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், 10 ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் சுந்தரராஜன் பாரதி செல்வி ஆகியோரின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில், இரண்டு பேருமே சொல்லி வைத்ததை போல 474 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
கவிதா தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண், ஆங்கிலம் பாடத்தில் 98 மதிப்பெண், கணிதம் பாடத்தில் 94 மதிப்பெண், அறிவியல் பாடத்தில் 89 மதிப்பெண், சமூக அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண் எடுத்துள்ளார், கனிஹா தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண், ஆங்கிலம் பாடத்தில் 97 மதிப்பெண், கணிதம் பாடத்தில் 94 மதிப்பெண்கள், அறிவியல் பாடத்தில் 92 மதிப்பெண், சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
முக்கியமாக கணிதம் பாடத்தில் இரண்டு பேரும் 94 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து இரட்டை சகோதரிகள் கனிஹா, கவிதா கூறுகையில், எங்கள் அப்பா சுந்தராஜன் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் இது சாத்தியமாகியுள்ளது. 11, 12 ஆம் வகுப்பில் இருவருமே பயோ மேக்ஸ் பிரிவு எடுக்க உள்ளோம்.
எங்களுக்கு ஆசிரியர்கள் நன்கு உதவினார்கள். நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினர். கல்வி கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதேபோல 12ஆம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்த செய்தியை பார்த்தோம்.
நாங்கள் நன்றாக தான் படித்தோம். இருப்பினும் இவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. ஆசிரியர்களுக்கும், கடவுகளுக்கும், எங்களின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் அடுத்த இலக்கு. என்றனர்.
முன்னதாக இதேபோல 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரில், அகல்யா மற்றும் அக்சயா என்ற இரட்டை சகோதரிகள் இருவரும் ஒரே மாதிரியான மதிப்பெண் (555 மதிப்பெண்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications