கோவை 8 ஆம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்காக கொடூர தாக்குதல் – கசாப்பு கடைக்காரர் கைது
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு ஆபாச படம் காண்பித்து, மது அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு மறுத்த மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் பள்ளி விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார். தொடர்ந்து சிறுவன் சொக்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

அந்த இளைஞரும் சிறுவனுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் சிறுவனை சூலூர் அருகே காடாம்பாடி விஐபி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அது ஆள் நடமாட்டமற்ற பகுதியாகும். அங்கு அவர் சிறுவனிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயற்து செய்துள்ளார். இதற்கு சிறுவன் மறுக்கவே, இளைஞர் மரக்கட்டையில் தாக்கியுள்ளார்.
இதில் சிறுவனின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர்கள் சூலூர் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போட்டோ, வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சூலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் சிறுவனை ஏற்றிச் சென்ற நபர் திருப்பூர் மாவட்டம், கோடாங்கி பாளையம் ஆராக்குளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் கூறுகையில், "வசந்தகுமார் இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். அன்றைய தினம் சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை. அவன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு வசந்தகுமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். வசந்தகுமார் சிறுவனை கருமத்தம்பட்டி வழியாக அழைத்துச் சென்று, சோமனூரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது வாங்கியுள்ளார்.
பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனுக்கு தன் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். மேலும் சிறுவனை மது அருந்த வைத்து, ஓரின சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். ஆத்திரமடைந்த வசந்தகுமார், சிறுவனை கற்கள் மற்றும் மரக்கட்டையால் தாக்கியுள்ளான்.
சிறுவன் தலைப்பகுதியில் காயமடைந்து மயங்கியுள்ளான். இதையடுத்து வசந்தகுமார் அந்தப் பகுதியில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டான். சிறுவன் மயக்கம் தெளிந்து சிறிது தூரம் சாலையில் சென்றுள்ளான். அங்கு மீண்டும் மயக்கடைந்தபோது, பொது மக்கள் மீட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் வசந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications