தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் கல்வெட்டு புறக்கணிப்பு-நிர்மலா சீதாரமன் நிகழ்ச்சிகளில் கிளம்பிய சர்ச்சை
கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் கல்வெட்டுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிப்பு: இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சரஸ்வதி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அரசு பாடலாக பிரகடனம் செய்திருந்தும் இந்த நிகழ்ச்சியில் அப்பாடல் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டது.

தமிழில் கல்வெட்டு இல்லை: இதேபோல வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்வெட்டுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த கல்வெட்டுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளையில் தமிழ் கல்வெட்டு வைக்கப்படவில்லை. இது சர்ச்சையாக வெடித்தது. கடந்த ஆண்டும் கோவை நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அட்வைஸ் செய்த நிர்மலா சீதாராமன்: இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், வங்கியில் கல்வெட்டுகளைத் திறந்து வைத்த உடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அதிகாரிகளை அழைத்து எந்த ஊரில் நீங்கள் கிளைகள் திறந்தாலும் அந்த ஊர் மொழியில் கல்வெட்டுகள் வைக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் முன்னிலையிதான் கூறினார். தமிழ் அங்கு புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரல் எனக்கு முன்னரே தெரியாது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னர்தான் எங்களுக்கு தெரியும். நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக்கொண்டதால் ஒருவேளை எனக்கு டக்கென தோணலை. நீங்க சொன்னதுக்கு பிறகுதான் தோணுது.. ஏனெனில் நிறைய புரோகிராம் காலையில் இருந்து..எந்த புரோகிராமில் என்ன பாடினாங்கன்னு கொஞ்சம் ஞாபகம் இல்லை என்றார்.

கோவையில் வரவேற்பு: முன்னதாக கோவைக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு பாஜகவினர் மிக பிரம்மாண்டமான வரவேற்பளித்தனர். விமான நிலையத்தில் பாஜக மகளிரணியினர் மலர்கள் தூவி பூமழை பொழிந்து நிர்மலா சீதாராமனை வரவேற்றனர்.
— மா.ச. மதிவாணன் (@masamathi) October 4, 2023
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications