"தேவியின் திருவிளையாடல்".. காய்கறி நறுக்கும் கத்தியுடன் ஸ்டேஷனுக்கு போன கணேசன்.. அதுக்குன்னு 27 இடமா?
கோவை: போலீஸ் ஸ்டேஷனுக்குள் காய்கறி நறுக்கும் கத்தியுடன் நுழைந்துள்ளார் கணேசன்.. அதற்கு பிறகு ஒன்றுவிடாமல் அவர் சொன்ன தகவலை கேட்டு, சூலூர் போலீசாரே அதிர்ந்து போனார்கள்.
கோவை சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. மனைவி பெயர் நிவேதா.. 24 வயதாகிறது.. இவர்களுக்கு 7 வயதில் ஹரீஸ் என்ற மகனும், 5 வயதில் பூஜா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துபோகுமாம்.. ஆனால், உடனே இருவரும் சமாதானமாகிவிடுவார்களாம்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் கணேசனுக்கும், நிவேதாவுக்கும் திடீரென தகராறு வந்துள்ளது.

ஆத்திரம் மனைவி: இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், நிவேதாவை கத்தியால் குத்திவிட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் நிவேதா சரிந்து விழுந்து உயிரிந்தார்.. மனைவியின் சடலத்தை பார்த்ததுமே அதிர்ந்து போன கணேசன், நேராக சூலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்துவிட்டார்.. மனைவியை குத்தி கொன்றதாக போலீசாரிடம் சொல்லவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அப்போது, கணேசன் தந்த வாக்குமூலம் இதுதான்:
"நான் அந்தமான் நிகோபார் தீவில் பிறந்தேன்... பெற்றோரை இழந்தவன்.. என்னை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தத்து எடுத்து வளர்த்தார்... 8 வருடத்துக்கு முன்பு அன்னூரில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் வேலை பார்த்து வந்தேன்... அப்போதுதான் நிவேதாவை சந்தித்தேன்.. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மணச்சநல்லூரை சேர்ந்தவர் நிவேதா.. நெருங்கி பழகினேன்.. நாங்கள் 2 பேருமே காதலித்தோம்.. பிறகு திருமணம் செய்து கொண்டோம்.

கள்ளக்காதல்: எங்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.. 3 வருடங்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையத்தில் வசித்து வந்தோம்... அங்கே நான் லோடு ஆட்டோ ஓட்டி வந்தேன்... கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிவேதா, கண்ணம்பாளையத்தில் உள்ள மில்லுக்கு வேலைக்கு போனார்.. அப்போது அதே மில்லில் வேலை பார்த்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது... நாளடைவில் அவர்களுக்குள் அது கள்ளக்காதலாக மாறியது... நான் வீட்டில் இல்லாத சமயம், முருகனை வீட்டிற்கு அழைத்து, என் மனைவி ஜாலியாக இருந்திருக்கிறார்.
இது அடிக்கடி நடந்துள்ளது.. அதனால், அக்கம் பக்கத்தினர் இதை பார்த்துவிட்டு, எனக்கு சொன்னார்கள்.. அதனால், நான் நிவேதாவை கண்டித்தேன்... இதன் காரணமாக எங்களுக்குள் தகராறு வந்தது.. அதனால், நிவேதாவை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன்.. அதன்படியே நிவேதா வேலைக்கு போகவில்லை.. ஆனால், முருகனுடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார்.. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மாமியார் சரோஜா: என்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக என்னுடைய மாமியார் சரோஜா, கடந்த சில நாட்களுக்கு முன்பு என் வீட்டிற்கு வந்திருந்தார்.. நேற்று நான் வேலைக்கு போய்விட்டு, குடிபோதையில் வீட்டிற்கு போனேன்.. அப்போது மாமியாரிடம் என்னுடைய குழந்தைகளுக்கு ஜூஸ் வாங்கி கொடுக்கும்படி சொல்லி வெளியே அனுப்பி வைத்தேன்... அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நிவேதாவுக்கும் எனக்கும் மறுபடியும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து நிவேதாவின் கழுத்தில் 5 இடங்களில் குத்தினேன்...
இதில் ரத்த வெள்ளத்தில் நிவேதா கீழே விழுந்தார். ஆனால், ஆத்திரம் அப்போதும் எனக்கு அடங்கவில்லை.. அதனால், மறுபடியும் நிவேதாவின் மார்பு, வயிறு, தொடை, கால் என மொத்தம் 27 இடங்களில் கத்தியால் குத்தினேன்.. இதில் சம்பவ இடத்திலேயே நிவேதா துடிதுடித்து இறந்தார்.. அதற்கு பிறகுதான் அந்த கத்தியை எடுத்துக் கொண்டு, ஆட்டோவில் ஏறி, சூலூர் போலீசில் சரணடைய வந்தேன் என்றார்.. காதல் மனைவியை 27 இடங்களில் கத்தியால் குத்திய கணேசன் இப்போது சிறையில் உள்ளார்.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
கண்ணெதிரே : அதாவது நேற்றுமுன்தினம், டியூட்டி முடித்துவிட்டு, கணேசன் வீடு திரும்பியிருக்கிறார்.. அப்போது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்துள்ளதாக தெரிகிறது. கணேசனை பார்த்ததுமே பதறிப்போன முருகன், அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கணேசனுக்கு ஆத்திரத்தை தந்துள்ளதாகவும், அதனாலேயே சம்பவத்தன்று மாமியாரை குழந்தைகளுடன் கடைக்கு அனுப்பிவிட்டு, நிவேதாவிடம் இதை பற்றி விசாரித்ததாகவும் தெரிகிறது.. இறுதியில் இது வாக்குவாதமாக மாறி, கொலை வரை சென்றுள்ளதே தவிர, கொலை செய்ய வேண்டும் நோக்கத்தில் கணேசன் இதை செய்யவில்லை என்கிறார்கள்.. எனினும் கொலை, கொலை தானே.. தாய், தந்தையை காணோம் என்று அந்த குழந்தைகள் அழுதுகொண்டிருக்கிறார்களாம்..!!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications