போஸ்டர் ஒட்டுவதில் பஞ்சாயத்து.. சமரசம் செய்தவருக்கு சரமாரி அடி.. சர்ச்சையில் இந்து அமைப்பினர்
கோவை: கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டுவதில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சமரசம் செய்ய சென்றவரை தாக்கியதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூர்யா என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்திக் நடித்து வெளியானது மெட்ராஸ் படம். இப்படத்தில் ஒரு சுவரை வைத்து எளிய மக்களின் வாழ்வில் அரசியலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். சுவரை யார் கைப்பற்றுவது என்பதில் இரு அரசியல் கட்சியினரிடையே ஏற்படும் மோதல் போக்கையொட்டி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக பண்டிகைகள், தேர்தல் வேளைகள் மற்றும் அரசியல் கட்சிகள் தலைவர்களின் வருகையின்போது சம்பந்தப்பட்ட கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். சில சமயங்களில் இந்த சுவரொட்டி ஒட்டும் சம்பவங்களால் சில தாறுமாறான தகராறுகள் ஏற்படுவதும் வழக்கம்தான்.
அந்த வகையில், கோவையில் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக சுவரொட்டி ஒட்டுவதில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, சமரசம் செய்ய சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூர்யா என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதில்,இந்து முன்னணியினர் ஒட்டிய சுவரொட்டிகளின் மீது இந்து மக்கள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதால் பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சூர்யா, இந்து முன்னணியினருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் என்பவர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார். அப்பொழுது இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சூர்யா, ஆட்டோ ஓட்டுனர் சதீஷை ஆபாசமாகப் பேசி தாக்கி மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், செல்வபுரம் காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சூர்யா மீது ஏற்கனவே கோவை நகரில் பல்வேறு அடிதடி வழக்குகளும், மோதல் வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்து முன்னணி அமைப்பில் நிர்வாகியாக இருந்த சூர்யா, மோசமான செயல்பாடுகளால் அதில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், சூர்யா இந்து மக்கள் கட்சியில் சேர்ந்து மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications