ரீ-என்ட்ரி கொடுத்த சேனாதிபதி மகள்: இளம் பெண் கவுன்சிலர் நிவேதா கோவை மாமன்ற உறுப்பினராக தொடர ஒப்புதல்
கோவை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சியின் இளம் பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி மீண்டும் மாகநராட்சி கவுன்சிலராக தொடர மாநகர கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை மாநகராட்சி 97வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் கவுன்சிலர் நிவேதா தான். 22 வயது கல்லூரி மாணவியாக தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர் ஆனார் நிவேதா.

நிவேதா சேனாதிபதி: நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார். நிவேதா தேர்தலில் களமிறங்கும்போதே மேயர் பதவிக்கு வருவார் என்ற பேச்சுகள் எழுந்தன. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 100க்கு 96 இடங்களில் வென்ற நிலையில், திமுக சார்பில் கல்பனா கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இளம் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி, மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி பதவி பறிபோகும்.
தகுதி இழப்பு: அந்தவகையில், கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து நிவேதா, மாமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.
மீண்டும் என்ட்ரி: அந்தவகையில், நிவேதா சேனாதிபதியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காததற்கு தனக்கு உடல்நிலை சரியில்லாததே காரணம் என விளக்கம் அளித்து, தன்னை மாநகர கவுன்சிலராக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மாநகராட்சி கவுன்சிலில் நிவேதாவின் பதவியை தொடரச் செய்யலாமா என்பது குறித்து மாமன்ற உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டது.
97வது வார்டு கவுன்சிலராக எஸ்.நிவேதா சேனாதிபதியை மீண்டும் நியமிக்க கோவை மாநகராட்சி கவுன்சில் இன்று ஒருமனதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, மாநகராட்சி கவுன்சிலராக நிவேதா சேனாதிபதி தொடர்கிறார். மாமன்ற கவுன்சிலின் ஒப்புதலுக்குப் பிறகு இன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிவேதா பங்கேற்றார்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications