கருணை ஆட்சியா? காட்டாட்சியா? எதுவேண்டும்... - திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடி
தமிழகத்திற்கு தேவை கருணை ஆட்சியா? காட்டாட்சியா? எது வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு கொடுமைகளும் தொல்லைகளும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவை: திமுகவும், காங்கிரஸ் கட்சிகளும் ஊழலில் ஊறிய கட்சிகள். தங்களின் சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் படுபரப்படைந்துள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்களின் பெறுமையையும், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்ட மோடி, திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார்.
நம்முடைய தேசம் இரண்டு விதமான அரசியலை கொண்டுள்ளது ஒன்று கருணை ஆட்சி மற்றொன்று காட்டாட்சி. தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சி மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் ஊழலில் ஊறிய கட்சிகள். தங்களின் சட்டைப்பையை நிரப்புவதற்காக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை தமிழ்நாடு அறியும். சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் எப்படி கொள்ளையடிப்பது என சிந்திக்கின்றனர் என்று கூறிய மோடி, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்து கொள்கின்றனர் என்றும் மோடி குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மூர்க்கத்தனமான அரசியலை முன்னெடுக்கின்றன. சொந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்களின் தேவை. திமுக ஆட்சிக் காலத்தின் மின்வெட்டை நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்று கேட்டார் மோடி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம் தமிழகத்தினை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான கட்சி என்ற தகுதியை திமுக இழந்து விட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications