கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.. ‘ஸ்வீட்’ நியூஸ் சொன்ன செந்தில் பாலாஜி!
வரும் கோடை காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை : ஏப்ரல், மே தொடங்கினாலே வெயில் வாட்டும் என்பதையும் தாண்டி மின் வெட்டு அதிகரிக்குமோ என்ற அச்சம் தான் பொதுமக்களிடையே அதிகமாக ஏற்படும். இந்நிலையில், வரும் கோடைக் காலத்த்தில் மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின் விநியோகம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
அப்போது அவரிடம் கோடைகாலம் தொடங்கவுள்ளதால், மின் விநியோகம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் விநியோகம், கோடைக் காலத்தில் கூடுதலாக ஏற்படுகிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. 4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைகாலத்தை சமாளிப்பதற்கு மின் விநியோகம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த பாதிப்பும் இருக்காது
இந்தக் கோடை காலத்தைப் பொறுத்தவரை மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பாக தெடர்ந்து ஆய்வு செய்து, முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார், அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

சோலார் பிளாண்ட்
மேலும், புதிதாக சூரிய மின் சக்தி பிளாண்ட் ஏதாவது அமைப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஏற்கெனவே 6 ஆயிரம் மெகாவாட் அளவில் சோலார் உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் இப்போதுதான் கோரப் போகிறோம். டெண்டர் முடிந்தபிறகு, முதல்வர் மூலம் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

மின் இணைப்பு + ஆதார்
மேலும், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. ஏறத்தாழ 99.7 சதவீதம் பேர் இணைத்துவிட்டனர். இன்னும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் இருக்கின்றர். அந்தப் பணிகளும் இன்னும் இரண்டொரு நாட்களில் முடியும்" எனத் தெரிவித்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications