நாடு முழுவதும் 'காஷ்மீர்' என்ற பெயரில் தெரு இருக்க வேண்டும்.. ஜக்கி வாசுதேவ் கோரிக்கை
காஷ்மீரின் பூர்வக்குடிகளே காஷ்மீர் பண்டிட்டுகள்தான். அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகள் மற்றும் அவலங்களை நம் நாட்டில் வாழும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கோவை: இந்தியா முழுவதும் ஒவ்வொரு நகரத்திலும் 'காஷ்மீர்' என்ற பெயருடன் கூடிய தெரு அல்லது சதுக்கம் இருக்க வேண்டும் என்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், காஷ்மீர் பண்டிட்டுகளின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணரும் வகையிலான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அகதிகளாக மாறிய பண்டிட்டுகள்
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 1990-களின் பிற்பகுதியில் தீவிரவாத இயக்கங்கள் பெருகத் தொடங்கின. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க வலியுறுத்தி பல நாசவேலைகளில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதலை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டனர். இதனால் உயிருக்கு அஞ்சி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

மீண்டும் தீவிரவாதிகள் அராஜகம்
இதனிடையே, மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதலாக, பண்டிட்டுகளை காஷ்மீரில் மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பேரில், பல மாநிலங்களில் இருந்த பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீரில் குடிபெயர்ந்தனர். ஆனால், தற்போது தீவிரவாதிகள் மறுபடியும் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் பல பண்டிக் சமூகத்தினர் உயிரிழந்து வருகிறார்கள்.

"தெருக்களுக்கு காஷ்மீர் பெயர்"
இந்நிலையில், 'உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு' (Global Kashmiri Pandit Diaspora) சார்பிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று பேசியதாவது: காஷ்மீரின் பூர்வக்குடிகளே காஷ்மீர் பண்டிட்டுகள்தான். அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகள் மற்றும் அவலங்களை நம் நாட்டில் வாழும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் காஷ்மீர் என்ற பெயருடன் கூடிய உள்ள தெருக்கள் அல்லது சதுக்கத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீங்கள் (காஷ்மீர் பண்டிட்டுகள்) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

"குறும்படம் எடுங்கள்"
நாட்டில் உள்ள அனைவருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலம் குறித்து தெரிய வேண்டும். இதற்காக, காஷ்மீர் பண்டிட்டுகளாகிய நீங்கள் தனி நபராகவும், குடும்பமாகவும் உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இந்தக் குறும்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. நமது செல்போன்களும், கம்ப்யூட்டர்களுமே போதுமானது. இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications