அதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமிக்கு பிப் 7 வரை நீதிமன்ற காவல்
கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமியை பிப்ரவரி 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க கோவை நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார்.
பாஜகவிற்கு எதிராக பேசியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

வழக்குகள்
இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து 2018-இல் மார்ச் 16-ஆம் தேதி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் பதவி விவகாரங்களில் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தார். சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்.

முதல்வர் மறுப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி அவர் செய்தியாளர்களை சந்தித்த கேசி பழனிச்சாமி தான் அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார். இவர் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் கேசி பழனிச்சாமியை நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா என கேட்டார்.

இணையதளத்தில் இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும் இணையதளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர்பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து கோவை லாலிரோட்டில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டார்.

வழக்கு பதிவு
அவர் சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சுமார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பனின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கே.சி. பழனிசாமியை பிப்ரவரி 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர் அக்கட்சியில் இருப்பது போல் தொடர்ந்து செயல்பட்டதாக அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி. ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து உடன் இருந்த கேசி பழனிச்சாமி ஜெ. மறைந்த பிறகு ஏற்பட்ட பிளவில் ஓபிஎஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications