கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே முழுவதுமாக முடிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. மழை வரும்போது அருவியாக இந்த மேம்பாலம் மாறுவது வாடிக்கையாகிவிட்டது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் சுமார் 1.85 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிப் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்.எம்.டபிள்யூ (LMW) சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மற்றும் வண்ணான்கோவில் சந்திப்பு ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளை இது கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Flyover Turns into a Waterfall in Coimbatore A Transformed Scene on the Mettupalayam-Ooty Route

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் அனுமதியோடு, சுமார் ₹115 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் 2020 நவம்பரில் தொடங்கி, டிசம்பர் 2023-ல் முடிவடைந்து, 2024 மார்ச் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த பாலம் திறக்கப்பட்டதிலிருந்தே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியும், சர்ச்சைகளும் நீடித்து வருகிறது. ஏனெனில் ஆபத்தான 90-டிகிரி திருப்பம் முக்கியமான காரணம் ஆகும். பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பாலத்தின் இறங்கு தளத்தில் ( இணையும் இடத்தில் திடீரென 90-டிகிரியில் வளைந்து திரும்ப வேண்டிய ஆபத்தான சூழல் இருந்தது. இதையடுத்து ஆபத்தான திருப்பப் பகுதியை நீக்கி, சர்வீஸ் ரோடு சீராகப் பாலத்துடன் இணையும் வகையில் 400 மீட்டர் தூரத்திற்குப் புதிய சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பாலத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால், லேசான மழை பெய்தாலே பாலத்தின் மீது குளம் போல் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது. அப்படித்தான் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பலத்த மழை பெய்ததால் மேம்பாலத்திலேயே மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நின்றது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிய அமைக்கப்பட்ட பைப் உடைத்து அதில் இருந்து வெளியேறும் மழைநீர் மோட்டர் பம்பில் இருந்து வரும் நீர் போல குபுகுபு என கொட்டுகிறது. மேலும் பாலத்தில் இடுக்கில் இருந்து நீர் அருவிபோல கொட்டி வருகிறது.

மேம்பாலத்தின் அடியே வரும் வாகனங்கள் இந்த அருவியில் குளித்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக பேருந்துகள் முழுவதுமாக மேம்பால அருவியில் நனைந்தப்படி வருகிறது. யாரை குறைகூறுவது என்று மக்களுக்கு தெரியவில்லை. இந்த மேம்பாலத்திற்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும் என்று மக்கள், வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+