Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்குடா தூக்கு.. கோவையில் சிலிண்டர் அபேஸ் .. பட்ட பகலில் பைக்கில் பறந்த சில்வண்டுகள்  

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ரோஸ் கார்டன் பகுதியில் இண்டேன் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகிக்க அப்பகுதியில் மொத்தமாக ஒரு இடத்தில் இறக்கி வைப்பது வழக்கமாகும். நேற்று வழக்கம் போல், சிலிண்டர்களை வீடு ஒன்றின் முன் இறக்கி வைத்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர்கள் இருவர், சிலிண்டரை திருடி தப்பி உள்ளார்கள். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் கோவை கடைவீதி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை மாநகரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.இங்கு சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, தொழில் நகரமாக திகழ்கிறது. கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கோவையின் சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் செய்தும், தொழிலாளர்களாகவும் கூட்டமாகவும், குடும்பத்தினருடனும் வசித்து வருகின்றனர்.

Gas Cylinders Stolen from Delivery Point in Coimbatore s Rose Garden Police Complaint Filed

இந்நிலையில் கோவை மாநகரில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது . அதில் தங்க நகை, பணம், இருசக்கர வாகனம், ஹெல்மெட், பெட்ரோல், வாகனங்களில் உதிரி பாகங்களைத் தொடர்ந்து பழங்களை அடுக்கி வைத்து இருக்கும் குடைகள், பாக்ஸ்கள் மட்டும் இன்றி தற்பொழுது சிலிண்டரையும் அலேக்காக அபேஸ் செய்யும் சம்பவமும் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இண்டேன் கேஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர்கள் அப்பகுதி வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு ஒரு இடத்தில் அடுக்கி வைத்து இருந்தனர்.

இந்நிலையில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிலிண்டர்கள் அடுக்கி வைத்து இருந்ததை பார்த்து அங்கும், இங்கும் நோட்டமிட்டு அலேக்காக சிலிண்டர் ஒன்றை தூக்கிக் கொண்டு அபேஸ் செய்து இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அது அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் கோவை கடைவீதி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பேரில் சிலிண்டரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சிசிடிவி கேமரா இருப்பது தெரியாமல் திருடிய நபர்கள் எளிதாக சிக்க வாய்ப்பு உள்ளது. வாகன எண் வைத்தும், முகத்தின் அடையாளங்களை வைத்தும், அவர்கள் எந்த வழியாக சென்றார்கள் என்பதை பல்வேறு சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், குற்றவாளிகள் விரைவில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+